TAMILNADU HIGHER SECONDARY SCHOOL VOCATIONAL TEACHERS KAZHAGAM REG NO.240/05

Home
=> Contact
NEW SCHOOL EDUCATION MINISTER
SPL.GRADE ORDER
PENSION GO 134
GRADE PAY GO263 DT.22.07.13
PAY ORDER
CALL LETTER FROM DSE
TALKS WITH MINISTER
PG PANNEL 2013 LR. From JDHS
GO 185 Vocational Teachers Commerce to promotion to PG Commerce
HIGH SCHOOL HEADMASTER PROMOTION JUDGEMENT
JD VOCATIONAL PROCEDINGS
SQUAD DUTY DGE ORDER
GO23 DT.12.01.2011 ONE MAN COMM.GO
News
INCENTIVE GO 240
GO 240 ANNEXTURE
HM LETTER TO CEO
GO203 BAN LIFTED TO APPOINT LGS
ONE MAN COMM GO270
MEETINGS
GRADE-2 Vocational Teacehr converted to Grade-1 GO358
Grade-2 convertion GO493
Post Cont.GO 152 upto 31.12.2013
NEW GROUPS GO277
PROFILE OF FORMER SCHOOL EDUCATION MINISTER
LINK PAGE
PAY-GO-75-DATED-08-04-2014-UPTO-DEC-2014
BT 2 PG HSHM OPTION LR.
GRADE PAY LETTER TO HM
Polls
PAY ORDER JAN-MAR2014
PAY ORDER 680 POST UPTO 30092014
KEY ANSWER
GRADE PAY LETTERS FROM DSE
NEW12Vocational Sub Code wef. March2012

COPY RIGHT : TAMILNADU HR.SEC.SCHOOL VOCATIONAL TEACEHRS KAZHAGAM REG. NO.240/95

 

தொழிற்கல்வி ஆசிரியர்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதி










நாள்.06.06.2023

*மீண்டும் பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடம் ஏற்படுத்தியதற்கு*

*தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் தமிழக முதலமைச்சருக்கும் பள்ளிக்கல்வி அமைச்சருக்கும் நன்றி, வரவேற்பு*

தமிழ்நாட்டின் கல்வி நலன், மாணவர் நலன், ஆசிரியர் நலன் கல்வி வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு நூற்றாண்டு பழைமை வாய்ந்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் இயக்குநர் பணியிடத்தை மீண்டும் இயக்குநர் பணிடமாக மாற்றி அரசாணை வெளியிட்டு பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடத்தில் முனைவர்.க.அறிவொளி அவர்களை நியமைத்து அணையிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் சார்பில் மனமார்ந்த நன்றியும் வரவேற்பும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

 இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது..

 பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடம் ஒரே பணியிடமாக (Director of Public Instructions) என இருந்தை கல்வி வளர்ச்சியின் அடிப்படையில் மாணவர் நலன், ஆசிரியர் நலன், கல்வி மேலாண்மை உள்ளிட்ட காரணங்களினால் இப்பணியிடம்

பள்ளிக்கல்வி, தொடக்கக்கல்வி, மெட்ரிக் கல்வி, முறைசாராகல்வி, கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி, தேர்வுத்துறை உள்ளிட்ட பல இயக்குநரங்கள் படிப்படியாக ஏற்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு முந்தைய அஇஅதிமுக அரசு ஆணையர் என்ற புதிய பணியிடம் அறிமுகம் செய்த போது அதை அனைத்து வகை ஆசிரியர் அமைப்புகளும் எதிர்த்தன. 

ஏற்கெனவே பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைச்செயலாளராக இந்திய ஆட்சிப்பணி அலுவலர் பணியிடம் நடைமுறையில் உள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறையின் ஆணையர் பதவியினை இரத்து செய்து பழைய நிலையில் பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடம் பதவி உயர்வின் மூலம் நிரப்பப்படும் பணியிடமாக தொடர ஆணையிட வேண்டுமென மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகமும் மற்றம் பல்வேறு ஆசிரியர் இயக்கங்களும் அரசியல் கட்சி தலைவர்களும் வேண்டுகோள் விடுத்தனர்.

தமிழ்நாட்டின் கல்வி நலன், மாணவர் நலன், ஆசிரியர் நலன் கல்வி வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு நூற்றாண்டு பழைமை வாய்ந்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் இயக்குநர் பணியிடத்தை  அரசாணை எண் 180 பள்ளிக்கல்வி நாள்.05.06.2023ன்படி பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடத்தில் மீண்டும் பதவி உயர்வின் மூலம் பணி மாறுதல் மூலம் முனைவர் க.அறிவொளி தொடக்க கல்வி இயக்குநராக முனைவர்.ச.கண்ணப்பன் ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளராக முனைவர் வி.சி.ராமேஸ்வரமுருகன், பள்ளிசாரா வயது வந்தோர் கல்வி இயக்குநராக முனைவர்.மு.பழனிச்சாமி, தமிழ்நாடு பாடநூல் பணிகள் கழக உறுப்பினர் செயலராக திரு.பெ.குப்புசாமி ஆகியோரை நியமித்து ஆணையிட்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் சார்பில் மனமார்ந்த நன்றியும் வரவேற்பும் தெரிவித்துக்கொள்கின்றோம். 

மேலும் 1978-79ஆம் கல்வியாண்டு முதல் நடைமுறையில் உள்ள மேல்நிலை தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் ஆசிரியர் பணி ஒய்வு பெறவதால் மூடப்படும் நிலை உள்ளது.  இதனால் தற்போது சுமார் ஒரு ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளது.  மெல்ல கற்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடம் நடைமுறை படுத்த வேண்டுகிறோம். தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிட வேண்டுகின்றோம்.

  இவண்,

வி.சேரமான்,             என்.ரவி,                  செ.நா.ஜனார்த்தனன்,

மாநில பொருளாளர்             மாநிலப் பொதுச்செயலாளர்     மாநிலத்தலைவர்

9443536316                         9443874071                        9443345667







நாள்: 13.05.2023

*புதிய ஓய்வூதிய திட்டம் இரத்து செய்ய இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை*

புதிய ஓய்வூதிய திட்டம் மற்றும் புதிய கல்விக்கொள்கை இரத்து செய்ய கோருதல் பழைய ஓய்வூதிய திட்ட நடைமுறை படுத்த கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய பொதுக்குழு கூட்டம் தீர்மானம்.

தலைமை நிர்வாகிகள் கூட்டமும், செயற்குழு கூட்டமும் அகில இந்திய பொதுக்குழு கூட்டமும் திருவனந்தபுரம் மாநகரில் கேரள மாநில ஆசிரியர் சங்க வளாகத்தில் நடைபெற்றது.

இது குறித்து இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது..

தேசிய நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கு தேசிய தலைவர் கே.சி.அரிகிஷ்ணன் தலைமை தாங்கினார்.    தேசிய பொதுச்செயலாளர் சந்திர நவ்தீப் பார்தி, ஆண்டறிக்கை சமர்பித்து பேசினார். பொருளார் பிரகாஷ் சந்திரமோகன்தி, நிதிநிலை அறிக்கை சமர்பித்து பேசினார். இணை பொதுச்செயலாளர் சுகுமார் பெய்ன், தேசிய துணைத்தலைவர் ச.மயில், தேசிய செயலாளர் அ.சங்கர் ஆகியோர் செயல்பாடுகள் குறித்து பேசினர்.  

தேசிய செயற்குழு உறுப்பினர்கள் அ.மாயவன்,ExMLC செ.நா.ஜனார்த்தனன்,  எஸ்.பிரபாகரன், பி.பேட்ரிக்ரெய்மன்ட், சிவஶ்ரீரமேஷ், டி.உதயசூரியன், பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.மணிமேகலை, ஜெ.மத்தேயு, ட்டி.ஜான்கிருஸ்துராஜ், ஆகியோர் உள்பட பல்வேறு மாநிலங்களை சார்ந்த உறுப்பினர்கள் பேசினர்.

இக்கூட்டமைப்பில் இணைந்துள்ள தமிழகத்தின் சார்பில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்,  தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கம்,  தமிழ்நாடு பதவிஉயர்வு பெற்ற முதுகலைப்பட்டதாரி சங்கம்,  தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு ஆகிய சங்கங்களின் மாநில நிர்வாகிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1.   புதிய கல்வி திட்டம் 2020ஐ ரத்து செய்ய வேண்டும் கல்வியாளர்கள் மற்றும் மாநில அரசுகளின் ஆலோசனையுடன் கல்விக் கொள்கையை உருவாக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது-

2.   புதிய பங்கேற்பு மற்றும் தேசிய ஓய்வூதிய திட்டத்தினை  (NPS) ரத்து செய்வது மற்றும் வரையறுக்கப்பட்ட நன்மைகளுடன் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

3.   தற்காலிக அல்லது ஒப்பந்த ஆசிரியர்களின் பணிகளை முறைப்படுத்துதல், சம வேலைக்கு சம ஊதியம், சேவைப் பாதுகாப்பு மற்றும் காலிப் பணியிடங்களில் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் ஆகியவை கோரிக்கைகளை ஒன்றிய மாநில அரசுகள் நிறைவேற்றிட வேண்டும்.

உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 



நாள்: 22.03.2022

*இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர்*

*பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த கோரி*

*வேலூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது*

************

பங்களிப்பு ஓய்வூதியம் திட்டம் இரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைபடுத்த வேண்டும் என்ற ஒற்றை கோரிகையை வலியுறுத்தி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் இன்று (மார்ச் 22ஆம் தேதி) மாலை வேலூர் மாவட்ட ஆட்சியரகம் எதிரே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளரும், கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான எ.சீனிவாசன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ரஞ்சன் தயாளதாஸ் வரவேற்று பேசினார்.

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தன், முன்னாள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எல்.மணி ஆகியோர் ஆர்ப்பாட்ட சிறப்புரையாற்றினர்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் எம்.பி.சுரேஷ்குமார், பொருளாளர் பி.உமா, தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் எஸ்.ராஜேஸ்கண்ணா, செயலாளர் ஆர்.எஸ்.அஜீஸ்குமார், பொருளாளர் ஆர்.ஜெயகுமார், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் எம்.எஸ்.செல்வகுமார், செயலாளர் எ.எஸ்.திருஞானசம்பந்தம், பொருளாளர் ஜெ.காந்தி தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் பெ.இளங்கோ, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் பி.கே.லட்சுமிவெங்கடேஷ், செயலாளர் எஸ்.எலிசா, பொருளாளர் வி.ரவி, பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழக மாவட்ட தலைவர் அ.பா.மணிவண்ணன், செயலாளர் கு.சங்கர், பொருளாளர் இரா.அமுதன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் எம்.பாண்டுரெங்கன், ஜாக்டோ ஜியோ மாவட்ட செய்தித்தொடர்பாளர் வாரா ஆகியோர் பேசினர்.

     தமிழ்நாட்டின் ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் 01.04.2003 முதல் தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டம் என்ற சி.பி.எஸ். (ஊளு) திட்டம் நடைமுறையில் உள்ள சமூக நீதிக்கு எதிரான இந்த திட்டத்திதை இரத்து ய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்திட கோரி இது வரை பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டும் இதுவரை ஆட்சிப்பொறுப்பில் இருந்தவர்கள் நடைமுறை படுத்தவில்லை.  தற்போது ஆட்சியல் உள்ள திராவிட முன்னேற்ற கழம் தனது தேர்தல் அறிக்கையில் வரி எண் 309ல் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை அளித்துள்ளது.  தேர்தல் வாக்குறுதியை நினைபடுத்துகிறோம்.  நிறைவேற்றக் கோருகிறோம் மேலும் ஆசிரியர் ஊழியர் நலன் சார்ந்த கோரிக்கைளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் சார்பாக நடைபெறும் 28,29 ஆகிய இருநாட்கள் இந்திய பொது வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பதெனவும் என்று தேசிய செயற்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன், எல்.மணி ஆகியோர் பேசினர். 

 

செ.நா.ஜனார்த்தனன்

தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர்

மற்றும் மாநிலத்தலைவர்

.நா.மேநிப தொழிற்கல்வி ஆசிரியர் கழகம்

Ph :9443345667

படவிளக்கம் ..  பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எ.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற போது எடுத்தப்படம் உடன் மாநில செயற்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன், மாவட்ட நிர்வாகிகள் எல்.மணி, எஸ்.ராஜேஸ்கண்ணா, எம்.பி.சுரேஷ்குமார், பெ.இளங்கோ, எஸ்.எலிசா, கு.சங்கர், வாரா உள்ளிட்டோர்
----------------------------------- 
இன்று பாராளுமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் 2022-23 நிதியாண்டிலும் தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக மாற்றப்படாத வருமான வரி உச்சவரம்பு, வரும் நிதியாண்டில் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தாண்டும் உச்சவரம்பில் மாற்றமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதால் மாத ஊதியம் பெறும் அனைவருக்கும் மிக பெருத்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. 

கரோனா நோய் தடுப்பு காரணமாக கல்வி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கல்விக்கென புதியதாக வகுப்புக்கு ஒரு தொலைக்காட்சி என 200 தொலைக்காட்சி அலைவரிசைகள் ஏற்படுத்தப்படும் என்பதும் ஒன்றாம் வகுங்ப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாநில மொழிகல்வியே நடைமுறை படுத்தப்படும் என்ற அறிவிப்புகள் மாணவர்களின் கல்வித்தரத்தினை மேம்படுத்த உதவும்.

கடந்த ஆண்டு இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் நிதியமைச்சகத்திற்கு நாங்கள் சமர்பித்த கோரிக்கை மனுவில் தனிநபர் வருமான வரி வரம்பு 5 இலட்சத்திலிருந்து 10 இலட்சமாக உயர்த்தி அறிவிக்க வேண்டும் எனவும், வருமான வரி செலுத்தும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் பொதுவான கழிவாக (Standard Deduction) குறைந்தபட்சம் ஆண்டிற்கு ரூபாய் ஐம்பதாயிரம் என திருத்தியமைக்க வேண்டும் என புதுதில்லியிலுள்ள நிதியமைச்சத்திற்கு சமர்பித்தோம். 

நாள்.. 17.01.2022

 

தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் தமிழக அரசுக்கு கோரிக்கை

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் வேலூர் காட்பாடியில் நடைபெற்றது.

       கூட்டத்திற்கு முன்னாள் மாவட்ட தலைவர் எம்.வெள்ளியங்கிரி தலைமை தாங்கினார்.  முன்னதாக மாவட்ட செயலாளர் க.ராஜா வரவேற்று பேசினார்.  மாவட்ட பொருளாளர் எம்.பாண்டுரெங்கன், ஒருங்கிணைப்பாளர் எஸ்.சச்சிதானந்தம், மகளிர் அணி செயலாளர் டி.சாந்தி ஆகியோர்  முன்னிலை வகித்து பேசினார்.

மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாநில மாவட்ட செயல்பாடுகளை விளக்கி பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது..

தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வரும் தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்வினை இரத்து செய்திட உரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள் அவர்களின் முயற்சிகள் வெற்றி பெற வேண்டும் மாணவர்கள் நலன் பாதுகாக்கப்டவேண்டும்.  இது போலவே தொழிற்கல்வி ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டுகின்றோம்.  சென்னை மற்றும் மதுரை கிளை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்புரைகளை நடைமுறைபடுத்தியும் அரசின் உறுதிமொழியின் படியும் தொகுப்பூதிய காலத்தில் 50 சதவிகித காலத்தினை பணிக்காலமாக கருதி ஓய்வூதியம் வழங்கிட உரிய ஆணைகள் பிறப்பிக்க வேண்டுகின்றோம்.  கடந்த 2007ஆம் ஆண்டிற்கு பிறகு ஏற்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நிறபப்படாமல் உள்ளது இதனால் மெல்ல கற்கும் மாணவர்கள் இடை நிற்கும் நிலை ஏற்படுகிறது இதனை தவிற்கும் வகையில் அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடத்தினை கட்டாய பாடமாக்க வேண்டும் தற்போது காலியாக உள்ள 600 தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.  ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கையினை ஏற்று அகவிலைபடி ஜனவரி 1ஆம் தேதி முதல் வழங்கியதற்கு வரவேற்கின்றோம். மாண்புமிகு.தங்கம் தென்னரசு அவர்கள் பள்ளிக்கல்வி அமைச்சராக இருந்த போது மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றி வரும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கிட கருத்துருக்களை கோரினார் அதற்கான உறுதி மொழியும் 01.03.2007 அன்று அளித்தார் அதனை  நிறைவேற்றி தருமாறு தமிழக அரசை கோருகின்றோம். என்றார்.

2022ஆம் ஆண்டிற்கான நாட்காட்டியினை மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் வெளியிட அதனை மாவட்ட செயலாளர் க.ராஜா, எஸ்.சச்சிதானந்தம், பெற்றுக்கொண்டனர்.

 

 

பின்னர் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1.   தமிழகத்தின் முதலமைச்சர் அவர்கள் தனது தேர்தல் அறிக்கையில் பக்கம்-85 ல் பத்தில் 316வதாக பள்ளிக்கல்வித்துறையில் அனைவருக்கும் 50 விழுக்காடு பகுதிநேர பணிக்காலத்தை ஓய்வூதியம் நிர்ணயிப்பதற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்ற வாக்குறுதிக்கு ஏற்பவும் மேலும் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும்  மதுரை கிளையில் பல்வேறு வழக்குகளில் வழங்கப்பட்டுள்ள தீர்புரையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை உடன் மேற்கொண்டு தமிழக அரசு ஆணைகள் வழங்கிட கோருகின்றோம்.  

2.   வெவ்வேறு பாடங்களில் உயர்கல்வி பெற்ற பலவகை ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கியுள்ளதை போல மேல்நிலை தொழிற்கல்வி ஆசிரியர்களின் வெவ்வேறு பாடங்களில் உயர்கல்வி பெற்றவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கிட கோருகின்றோம்.

  1. மேல்நிலைப்பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளுக்கு பாடம் போதித்து வரும் தொழிற்கல்வி ஆசிரியர் என்ற பெயரை முதுகலை தொழிற்கல்வி ஆசிரியராக மாற்றி அறிவிக்க வேண்டுகின்றோம்
  2. 01.06.2000க்கு முன்னர் மற்றும் 02.06.2000 முதல் 31.03.2007 வரை பெற்றோர் ஆசிரியர் கழகம்  / பள்ளி நிர்வாகம் மூலம் பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் சார்பான விவரங்கள் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.கண்.13758 / வி1/ இ1/ 2010 நாள்.08.07.2010ன்படி சான்றிதழ் சரிபார்புகள் மேற்கொள்ளப்பட்டு நிலுவையில் உள்ள 171 தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்கிட கோருகின்றோம்.  மேலும் அரசாணை எண்.80 பள்ளிக்கல்வி நாள் 15.09.2020ன்படி கல்வித்தகுதி முழுக்கல்வித்தகுதி பெறாமல் பணிபுரிந்து வந்த தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து பணிவரன்முறை செய்து அரசு ஆணையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே முழுகல்வித்தகுதியுடன் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் தொழிற்கல்வி ஆசிரியர் பணியினை வரன்முறை செய்து ஆணையிட வேண்டுகின்றோம்.
  3. தொழிற்கல்வி உயர்மட்ட குழுவின் தலைவர் டாக்டர் எச்.எஸ்.எஸ்.லாரன்ஸ் பரிந்துரையின் படியும், தற்போது மேல்நிலைப்பள்ளியில் உள்ள கணினி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட 12.2.2019ல் வெளியிடப்பட்ட அரசாணையின் அடிப்படையிலும் மேல்நிலை தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் என்ற உச்சநீதிமன்ற தீர்புரையின்படியும் தங்களது தேர்தல் அறிக்கை பக்கம்-84 பத்தி-311ல் தெரிவித்துள்ளபடியும் முதுகலை ஆசிரியருக்கு இணையான ஊதியம் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் உடனே வழங்கிட தமிழக அரசை கோருகின்றோம்.                                                
  4. தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 600 தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.
  5. மெல்லக்கற்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடத்தை கட்டாயப் பாடமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்
  6. தொழிற்கல்வி ஆசிரியர்கள் பணி ஓய்வு பெற்றால் அப்பள்ளியில் தொழிற்கல்வி பாடப்பிரிவு மூடப்படும் நிலை தடுக்கப்பட வேண்டும்.

பொதுவான கோரிக்கைகள்

9.   ஜீவாதாரமான கோரிக்கையான புதிய ஓய்வூதிய திட்டத்தினை இரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டுமென தமிழக முதலமைச்சரை கேட்டுக்கொள்கின்றோம்.

10.  நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வினை 01.07.2020 முதல் ஒன்றிய அரசுக்கு இணையாக வழங்கிட கோருகின்றோம்.

11.       தொகுப்பூதியம் மதிப்பூதியம் ஒப்பந்த ஊதியம் உள்ளிட்ட நடைமுறைகளை மாற்றி அனைவரும் முறையான காலமுறை ஊதியம் வழங்கி பணி வரன்முறை செய்திட கோருகின்றோம்.

 

1.   படவிளக்கம்.

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் பேசியபோது எடுத்தப்படம் உடன் மாவட்ட முன்னாள் தலைவர் ஆர்.மகாலிங்கம் செயலாளர் க.ராஜா, பொருளாளர் எம்.பாண்டுரெங்கன், ஒருங்கிணைப்பாளர் எஸ்.சச்சிதானந்தம், மகளிர் அணி செயலாளர் டி.சாந்தி ஆகியோர்

 

  1. படவிளக்கம்..  

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் 2022ஆம் ஆண்டு நாட்காட்டியினை வெளியிட செயலாளர் க.ராஜா, பொருளாளர் எம்.பாண்டுரெங்கன், ஒருங்கிணைப்பாளர் எஸ்.சச்சிதானந்தம், பெற்றுக்கொண்ட போது எடுத்தப்படம் உடன் மாவட்ட முன்னாள் தலைவர் ஆர்.மகாலிங்கம் மகளிர் அணி செயலாளர் டி.சாந்தி ஆகியோர்

 

 

*புதிய ஓய்வூதிய திட்டத்தினை திரும்பப்பெற*

*இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை*



புதிய ஓய்வூதிய திட்டத்தினை திரும்பப்பெற வேண்டுமெனவும் புதிய கல்விக்கொள்கையினையும் திரும்ப பெற வேண்டுமென இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைபு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் இதற்கென புதுதில்லியில் மார்ச் 6 ஆம் தேதி தேசிய அளவிலான கல்விக்கருத்தரங்கம் நடத்திடவும் தீர்மானித்துள்ளது.

இது குறித்து இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர்  செ.நா.ஜனார்த்தனன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது..

தேசிய தலைமை நிர்வாகிகள், செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டமும் தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் மாநகரில் சுந்தரய்யா விஞ்ஞான் பவனில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.  இக் கூட்டத்திற்கு தேசிய தலைவர் அபித்முகர்ஜி தலைமை தாங்கினார்.  தேசிய பொதுச்செயலாளர் சந்திர நவ்தீப் பார்தி,  தேசிய செயல்பாடுகளை விளக்கியும் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார்.

 

தேசிய துணைத்தலைவர் மற்றும் தெலுங்கானா மாநில ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் டி.எச்.சாவேரவி வரவேற்று பேசினார்.  இணை பொதுச்செயலாளர் ஹரிகிருஷ்ணன், பொருளார் பிரகாஷ் சந்திரமோகன்தி, ஆகியோர் முன்னிலை வகிக்து பேசினர்.  தேசிய துணைத்தலைவர்கள் கே.ராஜேந்திரன், எஸ்.மயில், துணைத்தலைவர் சம்யுக்தா, துர்காபவானி, ஆகியோர் உள்பட பலர் கருத்துரையாற்றினர்.

தமிழ்நாட்டினை சார்ந்த தேசிய செயற்குழு உறுப்பினர்கள் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், தமிழ்நாடு ஆரம்ப்ப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளர் மத்தேயு, பொதுக்குழு உறுப்பினர் ஜான், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் எ.சங்கர், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் பிரபாகரன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் பி.பேட்ரிக்ரெய்மன்ட், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் டி.உதயசூரியன், ஆகியோர் உள்பட 22 மாநிலங்களை சார்ந்த உறுப்பினர்கள் மாநில அறிக்கையினை சமர்பித்து பேசினார்கள்.

 

 

பின்னர் தேசிய செயற்குழுவில் பின்வரும் தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.

v  புதிய ஓய்வூதிய திட்டத்தினை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் நடைமுறைபடுத்திட கோரியும், புதிய கல்விக்கொள்கையை திரும்ப பெற கோரியும் புதுதில்லியில் 2022 மார்ச் மாதம் தேசிய மாநாடு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. 

v  இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின்    8வது தேசிய மாநாட்டினை மே மாதம் விஜயாவாடாவில் நடத்துவது  என்றும் அதற்கான ஏற்பாடுகளை ஆந்திர மாநில ஆசிரியர் கூட்டமைப்பு செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

v  தேசிய பெண் ஆசிரியர் பொது மன்றத்தின் (National Forum for Women Teachers) சார்பில் தேசிய அளவிலான மகளிர் மாநாடு நடத்துவது.

v  முதல் பெண் ஆசிரியை சாவித்திரி பாய் பூலே அவர்களின் தினத்தினையும் தேசிய மகளிர் தினத்தினையும் சிறப்பாக கொண்டாடுவது

v  விவசாயிகளின் போரட்டம் வெற்றி பெற்றதற்கு பாராட்டுகளை தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

v  வங்கி ஊழியர் சங்க போராட்டத்தினை ஆதரிப்பது என்றும் ஒன்றிய அரசு போராடும் ஊழியர் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி தீர்வு காண கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

v  ஜனவரி மாதம் தொழிற்சங்களின் சார்பில் நடைபெற உள்ள அகில இந்திய வேலைநிறுத்த போராட்திற்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேசிய அளவில் ஆசிரியர்களின் பிரச்சனைகள் அதனை தீர்பதற்கு மேற்கொள்ள வேண்டிய இயக்க செயல்பாடுகள், நடப்பாண்டில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் 2022-23ஆம் கல்வி ஆண்டின் திட்டமிடல் உள்ளிட்ட பல தலைப்புகளில் விவாதம் நடைபெற்றது.

 

இந்த கூட்டத்தில் தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, கேரளா, கர்நாடக, அஸ்ஸாம், மேற்குவங்கம், ஓடிசா, ஹரியானா, ராஜஸ்தான், திரிபுரா, பஞ்சாப், பிகார், ஜம்மு காஷ்மீர், மேகாலயா, டெல்லி, உள்ளிட்ட 20 மாநிலங்களில் உள்ள ஆசிரியர் சங்ககங்களின் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்று பேசினர்.

தெலுங்கானா மாநில ஆசிரியர் கூட்டமைப்பின் மாநிலத்தலைவர் ஜக்கைய்யா, பொதுச்செயலாளர் டி.எச்.சாவேரவி, பொருளாளர் லக்‌ஷ்மாரெட்டி, மாணிக்கம்ரெட்டி, கொண்டல்ராவ், சகாந்திகுமாரி, வெங்கடப்பா, அன்ஜயலு, காலய்யா, அசோக் உள்ளிட்ட மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 முடிவில் தேசிய பொருளார் மோகன்தீ நன்றி கூறினார்.

 

செ.மயில்                                             செ.நா.ஜனார்த்தனன்

மாநில ஒருங்கிணைப்பாளர்                         மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்

:9442079402                                          :9443345667

 

படவிளக்கம்

இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு கூட்டத்தில் தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் பேசியபோது எடுத்தப்படம் உடன் தேசிய தலைவர் அபித்முகர்ஜி., பொதுச்செயலாளர் சந்திர நவ்தீப்பார்தி, துணைத்தலைவர் கே.ராஜேந்திரன், எஸ்.மயில், பொருளாளர் மோகன்தீ, சம்யுக்தா ஆகியோர்.

------------------------------------------------------------------------

நாள். 27.07.2021

பள்ளிக்கல்வி அமைச்சர், பள்ளிக்கல்வி ஆணையருடன் தொழிற்கல்வி மற்றும் மாநகராட்சி ஆசிரியர்கள் சந்திப்பு கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதி








அன்பான அனைவருக்கும் வணக்கம்.  எனது பேஸ்புக் தகவல்களை தவறாக பயன்படுத்தி யாரோ சிலர் பணம் கேட்டு மெசேஜ் அனுப்பியதாக சில நன்பர்கள் தெரிவித்தனர். நான் மிக நல்ல உடல் நலத்துடன் உள்ளேன் எனது உறவினர்களும் மிக நலத்துடன் உள்ளனர்.  நான் முகநூல் வாயிலாக (Face Book) யாருக்கும் பணம் கோரி தகவல் (Message) அனுப்பவில்லை என்பதை அறியவும்.  தற்போது எனக்கு எந்த பணத்தேவையும் இல்லை.  எனவே எனது பெயரை தவறாக முகநூல் வழியாக பயன்படுத்தி பணம் பறிக்க முயற்சி செய்கின்றனர்.  எனவே யாரும் பணம் அனுப்ப வேண்டாம்.  நான் யாரிடமும் எதற்காகவும் பணம் கோரவில்லை.  என்றும் அன்புடன் செ.நா.ஜனார்த்தனன், 

நாள்.11.05.2021

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நிவாரண பணிகளுக்கு உதவிடும் வகையில்

தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியாக

ஒரு நாள் ஊதியம் வழங்க தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் முடிவு  

       கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நிவாண பணிகளுக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் சார்பில் ஒவ்வொரு தொழிற்கல்வி ஆசிரியர்களும் தங்களது ஊதியத்தில் ஒரு நாள் ஊதியம் வழங்குவதென முடிவெடுத்துள்ளது.

 தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் கானொலி வாயிலாக நடைபெற்ற மாநில நிர்வாகக்குழு கூட்டத்திற்கு மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.

 முன்னதாக மாநில பொதுச்செயலாளர் என்.ரவி வரவேற்று பேசினார்.  மாநிலப்பொருளாளர் வி.சேரமான், ஒருங்கிணைப்பாளர் பி.திருநாவுக்கரசு, மாநில அமைப்புச்செயலாளர் எஸ்.துரைராஜ், செய்தித்தொடர்பாளர் கடலூர் என்.ரவி, மாநில துணைத்தலைவர்கள் கே.நட்பாளன், எ.முகமதுரபீக், க.ராஜா, மாநில இணை செயலாளர்கள் எம்.பாண்டுரெங்கன், எஸ்.தினகரன், சி.நாகராஜன், மாநில தணிக்கையாளர்கள் எம்.வெள்ளியங்கிரி, ஆர்.ராஜசேகரன், எ.ஜெயபோஸ் ஆகியோர் பங்கேற்று பேசினர் பின்னர் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

v  கரோனா வைரஸ் தடுப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.  அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவி உள்ளிட்ட பல்வேறு நிவாரண பணிகளுக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்கள் தங்களின் ஒரு நாள் ஊதியத்தினை தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியாக வழங்குவதெனவும் இத் தொகையின் எங்களின் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்திட கோரி முடிவெடுக்கப்பட்டது. 

v  ஒரு நாள் ஊதியம் பிடிப்பதற்கான ஒப்புதல் கடிதம் இன்று தமிழக முதலமைச்சர் மாண்புமிகு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் தலைமைச்செயலாளர், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

v  ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் ஒரு அங்கமாக திகழும் தொழிற்கல்வி ஆசிரியர் கழகமும் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் எடுத்த முடிவின் அடிப்படையிலும் செயலாற்றுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

v  தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திமுக தலைவர் மாண்புமிகு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கும் ஏனைய அமைச்சர் பெருமக்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

v  தமிழக அரசு பொறுப்பேற்றவுடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விரைந்து செயலாற்றி போதிய ஆக்ஸிஜன் பெறுவதற்காக மத்திய அரசுடன்  பேசி கூடுதலாக ஆக்ஸிஜன் பெற உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ள செயல்களையும் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

v  கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கும் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்கள், மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், கடும் வெயிலையும் தாங்கிக்கொண்டு காவல் பணியாற்றிவரும் காவல் துறையினரின் பணிகளையும் தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் மனதார பாராட்டுகிறது.

v  தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளில்  கரோனா நிவாரண உதவி, பால் விலை குறைப்பு, மகளிருக்கு பேருந்து வசதி, உள்ளிட்ட அறிவிப்புகளை வரவேற்கின்றோம் இது போலவே தேர்தல் அறிக்கையில் குறிபிட்டது போல சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளை நடைமுறை படுத்தி தொழிற்கல்வி ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தினை ஓய்வூதியம் பெற கணக்கிட வேண்டி தமிழக அரசை கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

v  மெல்லக்கற்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடத்தினை கட்டாய பாடமாக்க வேண்டும்.

v  மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் அனைவரும் முதுகலை தொழிற்கல்வி ஆசிரியர்களாக தரம் உயர்த்தி கணினி ஆசிரியர்களை மாற்றியதை போல ஆணையிட வேண்டுகின்றோம்.

இவண்,

செ.நா.ஜனார்த்தனன்,    என்.ரவி,                 வி.சேரமான்,

மாநிலத்தலைவர்                மாநிலப் பொதுச்செயலாளர்     மாநில பொருளாளர்     

9443345667                        9443874071                        9443536316          

பி.திருநாவுக்கரசு           எஸ்.துரைராஜ்,             கடலூர்.என்.ரவி

  மாநில ஒருங்கிணைப்பாளர்                மாநில அமைப்புச்செயலாளர்         மாநில செய்தித்தொடர்பாளர்

பள்ளிக் கல்வி அமைச்சராக திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி.


02.05.2021  

தமிழக முதல்வராக பொறுப்பேற்கும் திமுக தலைவர் மாண்புமிகு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு

தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் பாராட்டு

தமிழக சட்டப்பேரவையின் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் திராவிட முன்னேற்ற கழகம் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்கும் தலைவர் மாண்புமிகு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத்தலைவரும் ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக்குழு உறுப்பினருமான செ.நா.ஜனார்த்தனன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது..

தொழிற்கல்வி ஆசிரியர்களின் வாழ்வில் ஒளி வீச செய்த அரசு திமுக அரசு தமிழகத்தில் 1979 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் பணியினை முதன் முறையாக 1989ஆம் ஆண்டில் டாக்டர் கலைஞர் அவர்கள் தான்  பணிநிரந்தரம் செய்து தொழிற்கல்வி ஆசிரியர் வாழ்வில் முன்னேற்றம் அளித்த்தார்.  தொடர்ந்து அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடங்களை கட்டாய பாடமாக்கினார்.  அவரின் வழித்தோன்றலக தமிழகத்தின் விடிவெள்ளியாக ஆசிரியர் அரசு ஊழியர்களின் பாதுகாவலனாக தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்கும் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

திமுக தலைமையிலான தமிழக அரசு மெல்ல கற்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 600 தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.  கடந்த 10ஆண்டுகளாக பெற்றோர் ஆசிரியர் கழகத்தினால் நியமிக்கப்பட்டு பணியாற்றிவரும் தொழிற்கல்வி ஆசிரியர்களை பணிவரன்முறை செய்திட கோருகின்றோம்.



30.04.2021

தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடம் உள்ளிட்ட 6156 பணியிடங்களுக்கு பணி நீட்டிப்பு ஆணை கோரி பள்ளிக் கல்வி இயக்குனர் அவர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.   ஆயினும் இன்று ஏப்ரல் மாத்த்திற்கான விரைவூதிய ஆணை கிடைக்கப்பெற்றுள்ளது இணைத்துள்ளோம்   

செ.நா.ஜனார்த்தன்ன் மாநிலத்தலைவர் தொழிற்கல்வி ஆசிரியர் கழகம்


Page-2

26.04.2021 Pay Order Not Yet Received. by Janardhanan President TNHSSVTK 
Date: 23.04.2021   தொழிற்கல்வி ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்

31.12.2020 நாளுடன் பணி நீட்டிப்பு ஆணை காலம் நிறைவு பெற்றது.  நமது பள்ளி கல்வி இயக்குனர் அவர்களின் கடிதத்தின் அடிப்படையில் மூன்று மாதத்திற்கான சான்றிதழ் அளிக்கப்பட்டு அந்த காலமும் மார்ச் 31 நிறைவுபெற்றது.  6156 பணியிடங்களில் உதவி பெறும் பள்ளிகளுக்கு பணியிடங்கள் 230 கழித்தது போக மீதமுள்ள 5926 பணியிடங்களுக்கு பணி நீட்டிப்பு ஆணை கோரி பள்ளிக் கல்வி இயக்குனர் அவர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.   ஆயினும் இது நாள் வரையிலும் அதற்கான பணி நீட்டிப்பு ஆணை கிடைக்கப்பெறவில்லை.   இதுகுறித்து நமது மதிப்பு மிக்க பள்ளிக்கல்வி இயக்குனர் ஐயா அவர்களின் கனிவான பார்வைக்கு இன்று கொண்டு சென்றோம்.   ஐயா அவர்களும் நம்மோடு பேசினார்கள் அப்போது இந்த பணியிடங்கள் குறித்து பல்வேறு விளக்கங்களை நிதித்துறையும் கல்வித்துறையும் கோரியிருந்தது அந்த தகவல்களை இரண்டு நாட்களுக்கு முன்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது எனவே வரும் வாரத்தில் அதற்கான அரசாணை அல்லது விரைவூதிய ஆணை கிடைக்கப்பெறும் என உறுதி அளித்திருக்கிறார்கள்.   மதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்கள் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள் என்ற விவரத்தை பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.   எனவே  அதற்கான ஆணை விரைவில் கிடைக்கப்பெறும் என்ற தகவலை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்  மேலும் நமது கழகத்தின் மாநில தலைமை நிலைய செயலாளர் மதிப்பிற்குரிய தி.தாகப்பிள்ளை அவர்கள் இன்று தலைமைச் செயலகம் சென்று பணி நீட்டிப்பு ஆணை குறித்து பள்ளி கல்வித்துறை துணை செயலாளர் இணை செயலாளர் ஆகியோரை சந்தித்து விசாரித்தார்கள் அடுத்த வாரம் உரிய ஆணைகள் வரவிருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள் என்ற தகவலையும் தங்கள் அனைவருக்கும் கனிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 
என்றும் சமூகப்பணியில்
செ.நா.ஜனார்த்தனன் மாநிலத் தலைவர்
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம்


தமிழர்களின் திருநாள் ? பொங்கல் திருநாளிலே தித்திப்புடன் மகிழ்ச்சி பொங்கட்டும்?

?அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்?   செ.நா.ஜனார்த்தனன், மாநிலத்தலைவர், 











தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் 34ஆம் ஆண்டின் மாநில பொதுக்குழு கூட்டம் திருவாரூரில்  நடைபெற்றது.

மாநிலத்தலைவர் எஸ்.ரெங்கநாதன் தலைமை தாங்கினார். முன்னதாக மாநில ஒருங்கிணைப்பாளர் நாகை என்.ரவி வரவேற்று பேசினார்.  மாநில கௌரவத்தலைவர் த.ராமச்சந்திரன் முன்னிலை வகித்து பேசினார்.

மாநிலப் பொதுச்செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் மாநில செயல்பாடுகளை விளக்கி பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது… தமிழகத்தில் கடநத் 2007ஆம் ஆண்டிற்கு பிறகு புதியதாக தொழிற்கல்வி ஆசிரியர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை மேலும் கடந்த 10 ஆண்டுகளாக காலி ஏற்பட்டுள்ள பணியிடங்களும் நிரப்பப்படவில்லை இதனால் மாணவர்கள் தொழிற்கல்வி பெற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.  தற்போது தமிழக அரசு தொழிற்கல்வி பாடங்களை தற்கால தேவைக்கேற்ப மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளது எனவே அனைத்து மேனிலைப்பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடங்களை கட்டாய பாடமாக்க வேண்டும்.  மேலும் கடந்த 30 ஆண்டுகளாக எந்தவிதமான பதவி உயர்வின்றி பணியாற்றி வரும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு தலைமையாசிரியராக பதவி உயர்வு அளிக்க வேண்டும் தமிழகத்தில் உள்ள பல இலட்சம் ஆசிரியர்கள் வெவ்வேறு பாடத்தில் உயர்கல்வி பெற்றால் ஊக்க ஊதிய உயர்வு வழங்கி வருவதை போல் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் வழங்கிட வேண்டுகின்றோம் என்றார்.

பணி நிறைவு பெற்ற மாநிலத்தலைவர் எஸ்.ரெங்கநாதன், பொருளாளர் எ.பி.குமணன், கௌரவ முனைவர் பெற்ற, மாநில நல்லாசிரியர் விருது பெற்ற, பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டப்பட்டனர்.

பின்னர் பின்வரும் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.  கடலூர் ஜி.பாண்டியன், தஞ்சை எஸ்.செந்தில்நாதன் ஆகியோர் தேர்தல் அலுவலராக செயலாற்றி பின்வரும் நிர்வாகிகளை ஒருமனதாக தேர்வு செய்து அறிவித்தனர்.

மாநிலத்தலைவராக                செ.நா.ஜனார்த்தனன், வேலூர்

மாநில பொதுச்செயலாளராக        என்.ரவி, நாகப்பட்டினம்

மாநிலப்பொருளாளராக             வெ.சேரமான், கடலூர்

….2

பக்கம்-2

 

மாநில ஒருங்கிணைப்பாளராக      திருநாவுக்கரசு, திருவாரூர்

மாநில அமைப்புச்செயலாளராக     எஸ்.துரைராஜ், விழுப்புரம்

மாநில செய்தித்தொடர்பாளராக            என்.ரவி, கடலூர்

மாநில மகளிர் அணி செயலாளராக        டி.வைஜெயந்தி, சென்னை

மாநில துணைத்தலைவர்களாக            நட்பானந்தம், நாகப்பட்டினம்

                                         முகமதுரபீக், திருவாரூர்

மாநில இணை செயலாளர்களாக           எம்.பாண்டுரெங்கன், வேலூர், இராணிப்பேட்டை

                                         எஸ்.தினகரன், திருவாரூர்

                                         நாகராஜன், நாகை

மாநில தணிக்கையாளர்களாக             எம்.வெள்ளியங்கிரி, திருப்பத்தூர் (வேலூர்)

                                         ராஜசேகர், விழுப்புரம்

ஆகியோர் தேந்தெடுக்கப்பட்டனர்.

பின்னர் பின்வரும் பொருள் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1.சென்னை உயர்நீதிமன்ற தீர்பின்படியும் தமிழக அரசின் பல்வேறு அரசாணையின் படியும் 06.04.2018 என்ற நிபந்தனை நாளினை தளர்த்தி அனைவரும் பயன் பெறும் வகையில்  தொகுப்பூதிய காலத்தினை கணக்கிட்டு ஓய்வூதியம் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு வழங்கிட கோரியும்,

 

2. எந்த விதமான பதவி உயர்வின்றி கடந்த 30 ஆண்டுகளாக ஒரே பதவியில் பணியாற்றி வரும் மேல்நிலை தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டுகின்றோம்.

3.வெவ்வேறு பாடங்களில் உயர்கல்வி பெற்று இருந்தால் பிற ஆசிரியர்களுக்கு வழங்குவது போல் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் இரண்டு ஊக்க ஊதிய உயர்வு அளிக்க கோரியும்

4. தற்கால தேவைக்கேற்ப தொழிற்கல்வி பாடதிட்டங்களை மேம்படுதப்பட்டு வருவதால் தற்போது உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடத்திட்டதை கட்டாயபாடமாக்கிட கோருகின்றோம். 

5.சமவேலைக்கு சம ஊதியம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியருக்னையான ஊதியம் அளிக்க கோரியும்

6.அரசாணை எண்.35ல் விடுபட்டுள்ள மற்றும் தொகுப்பூதியம் பெற்று பணியாற்றிவரும் மேல்நிலை தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் கோருதல்

7. தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 700 தொழிற்கல்வி ஆசிரியர் காலி பணியிடங்களை உடனே நிறப்பிட கோருகின்றோம்.

8. இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தீர்மானங்களின் படி புதிய கல்விக்கொள்கையினை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.

9. ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற போராட்டத்தின் போது வழங்கப்பட்ட

    17பி குறிப்பாணைகளை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும்

இவண்,

 

 

செ.நா.ஜனார்த்தனன், என்.ரவி,                    வி.சேரமான்,

மாநிலத்தலைவர்             மாநிலப் பொதுச்செயலாளர்        மாநில பொருளாளர்              

9443345667                 9443489280                




ஜுனியர் ரெட்கிராஸ் சேவைக்கு

மாவட்டக்கல்வி அலுவலர் மு.அங்குலட்சுமி பாராட்டு


கரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்கவும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் கபசுரகுடிநீர் விடைத்தாட்கள், முன்னேற்ற அறிக்கை சமர்பிக்கும் முகாமில் கபசுரகுடிநீர் வழங்கியதற்காக வேலூர் கல்வி மாவட்ட அலுவலர் மு.அங்குலட்சுமி ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனனை பாராட்டி சான்றிதழ் வழங்கியபோது எடுத்தப்படம் உடன் பள்ளி துணை ஆய்வாளர் எ.மணிவாசகன், தலைமையாசிரியர்கள் எஸ்.எஸ்.சிவவடிவு, ஜெயதேவரெட்டி, அறிவழகன், சுரேஷ்  உதவியாளர் பிரபுலிங்கம் ஆகியோர்.

News Paper cuttings 




 

தமிழகத்தில் மேல்நிலைப்பள்ளிகளில் பகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியர்களை முழுநேர தொழிற்கல்வி ஆசிரியர்களாக பணிநிரந்தரம் செய்த தமிழக அரசின் கல்வியமைச்சராக இருந்த பேராசிரியர். க.அன்பழகன் அவர்களின் மறைவு ஈடு செய்யமுடியாத இழப்பாகும் என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.







TNHSS VTK GEN SEC. MR.S.N.JANARADHANAN'S MOTHER PASSED AWAY


தமிழக ஆளுநர் மாண்புமிகு பன்வாரிலால் புரோகித் அவர்களால் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார் செ.நா.ஜனார்த்தனன்


தமிழ்நாடு முதலமைச்சருடன் சந்திப்பு

பள்ளிக்கல்வித்துறை மான்ய கோரிக்கையில் தொழிற்கல்வி 2019-20
3.13.3.Vocationalisation of Secondary and Higher Secondary Education
The Scheme of “Vocationalisation of Higher Secondary Education” was brought to enhance
the employability of youth through demand driven competency based modular vocational
courses. This scheme helps to enhance the competitiveness of students through provisions
of multi-entry, multi-exit learning opportunities and vertical mobility/ inter-changeability in
qualifications, thereby minimising the gap between education provided and the availability
of employment opportunities in order to reduce the dropout rate at the secondary level.
Currently, the scheme is being implemented in 67 schools in the 67 Educational Districts with
2 trades per school. The vocational courses are in accordance with the National Skills
Qualification Framework (NSQF) from standards 9 to 12. The 6 trades covered are Agriculture,
Multi Skill Foundation Course, Electronics and Hardware, Beauty and wellness, Automotive and
Apparel and home furnishings. In the academic year 2018-19, 5,342 students have been
benefitted through this scheme which includes 2,727 girls and 2,615 boys. An amount of
Rs.741.09 lakh has been utilized for this scheme.
மாண்புமிகு.கே.எ.செங்கோட்டையன், பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர்
02.07.2019 தமிழக சட்டப்பேரவை


மாவட்ட பொதுக்குழு கூட்ட நிகழ்வுகள்





11.10.2018 தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச்செயலாளருமான செ.நா.ஜனார்த்தனன் அவர்களின் தந்தை செ.ந.நாகலிங்கஆச்சாரி(88) அவர்கள் இன்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலன்றி மறைந்தார் அன்னாரின் கண்கள் தானமாக வேலூர் சிஎம்சி கண் மருத்துவமனைக்கு அளிக்கபட்டது.


நாள்.11.10.2018
காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் செயலாளரின் தந்தை
மறைந்த நாகலிங்க ஆச்சாரியின் கண்கள் தானம்
சார் ஆட்சியர் கே.மேகராஜ் ஆழ்ந்த இரங்கல்
காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் செயலாளரும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச்செயலாளருமான செ.நா.ஜனார்த்தனன் அவர்களின் தந்தை செ.ந.நாகலிங்கஆச்சாரி(88) அவர்கள் இன்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலன்றி மறைந்தார் அன்னாரின் கண்கள் தானமாக வேலூர் சிஎம்சி கண் மருத்துவமனைக்கு அளிக்கபட்டது.
கண்கள் தானம்
வேலூரில் உள்ள தமிழ்நாடு விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்கம் தோன்றுவதற்கு காரணமாக இருந்தவர் செ.ந.நாகலிங்க ஆச்சாரி (88) அவரின் இரண்டு கண்களும் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. அவருக்கு செ.நா.குப்புசாமி, செ.நா.ஜனார்த்தனன், செ.நா.முத்துசாமி, ஆகிய மூன்று மகன்களும் ஈஸ்வரி சங்கர், சாந்தி மதிவாணன் ஆகிய மகள்களும் உண்டு
சார் ஆட்சியர் கே.மேகராஜ் இரங்கல்
அன்னாரின் மறைவு ரெட்கிராஸ் மருத்துவ மையத்திற்கு ஈடு செய்யமுடியாத இழப்பாகும். அன்னாரி பணி மிகவும் பாராட்டுக்கு உரியது. அன்னாரின் மறைவினால் வாடும் குடுப்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் தலைவரும் வேலூர் சார் ஆட்சியருமான கே.மேகராஜ் தெரிவித்துள்ளார்.
காட்பாடி ரெட்கிராஸ் அவைத்தலைவர் டி.வி.சிவசுப்பிரமணியன், துணைத்தலைவர் வழக்கறிஞர் வி.பாரிவள்ளல், அவைதுணைத்தலைவர் இரா.சீனிவாசன், பொருளாளர் வி.பழனி, ரமேஸ்குமார்ஜெயின், இணை செயலாளர் ஆர்.விஜயகுமாரி, செயற்குழு உறுப்பினர்கள் நேரில் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்நாடு விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்க தலைவர் சி.ஜோமூர்த்தி, பொருளாளர் மணி, ஒருங்கிணைப்பாளர் நடராசன், அமைப்புச்செயலாளர் வி.குப்புசாமி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் எஸ்.ரெங்கநாதன், மாநில அமைப்புச்செயலாளர் சோ.சம்பத், மாவட்ட தலைவர் எம்.வெள்ளியங்ககிரி, பொருளாளர் எம்.பாண்டுரெங்கன், காந்திநகர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் வி.பழனி உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்

(செ.நா.ஜனார்த்தனன், செயலாளர், 9443345667)

செ.நா.ஜனார்த்தனனின் சிறப்பான சேவையினை பாராட்டி வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமிரு.எஸ்.எ.ராமன் அவர்கள் சால்வை அணிவித்து கௌரவித்தபோது



செ.நா.ஜனார்த்தனன் மாநில பொதுச்செயலாளர் 9443345667 Email: tnhssvtk@gmail.com




கூட்டமைப்பின்
மாநில அமைப்பாளர் எம்.ராஜாராம். எல்.நடராஜன் உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்பினை நடைமுறைபடுத்தி தமிழக நிதித்துறை செயலாளர் ஆணை
http://www.tn.gov.in/go_view/dept/9    

 

நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் இறுதி விசாரணை 14/09/2018
அரசாணை எண்/194 பள்ளிக்கல்வி நாள் 12/09/2018

நமது சங்கத்தின் மாநில தலைமை நிலைய செயலாளராக இருந்து பணி நிறைவு பெற்ற சென்னை திரு.வி.கே.சட்டநாதன் அவர்களால் தொடரப்பபட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 14.09.2018 அன்று நீதிமன்ற ஆணையினை மதிக்க தவறினால் துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என் சென்னை உயர்நீதிமன்றம் 31.08.2018ல் அளித்த உத்தரவின் பேரில் தொகுப்பூதிய காலத்தினை கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்குவதற்கான அரசாணை நிதித்துறையின் ஒப்புதல் பெறப்பட்டு நாளை நீதிமன்றத்தில் சமர்பிக்கபட உள்ளதாக தெரியவருகிறது.  ஏற்கெனவே சேலம் மாவட்டத்தை சேர்ந்த திரு.அங்கப்பன், திரு.பரசுராமன், திரு.ராஜேந்திரன் ஆகிய மூவருக்கு வழங்கப்பட்ட தீர்பினை நடைமுறைபடுத்தாத காரத்தினால் அவர்களின் ஒப்புதலுடன் திரு.வி.கே.சட்டநாதன், திரு ஆர்.சரவணன் ஆகியோர் இணைந்து திரு.எஸ்.தட்சிணாமூர்த்தி, திரு.எஸ்.சம்பத், திரு.செ.நா.ஜனார்த்தனன் ஆகியோர் உள்ளிட்ட பல மாவட்டங்களின் நிர்வாகிகள் அனைவரின் கூட்டு சக்தியால் அரசாணை எண்-131, 132, 134 பெற்றோம் அதனை தொடர்ந்து வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு திரு.பி.ராகவேந்திரன் அவர்கள் பணி நிறைவு பெற்றபின்னர் மாநில பொதுச்செயலார்(செ.நா.ஜனார்த்தனன்) அவர்களை அனுகி கேட்டபோது திரு.ஆர்.சரவணன், திரு.வி.கே.சட்டநாதன் அவர்களின் ஆலோசனையின் படி வழக்கறிஞர் திரு.ஆர்.சசிதரன் அவர்களை நேரில் சந்தித்து  திரு.பி.ராகவேந்திரன் வழக்கினை தொடர்ந்து நீதிமன்ற ஆணையினை பெற்றார் மேலும் இவ்வாணையினை அரசு நடைமுறைபடுத்தாத காரணத்தினால் திரு.பி.ராகவேந்திரன் அவர்களால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை தவிர்க்கும் பொருட்டு அரசாணை எண்.148 நாள் 22.06.2018  பெறப்பட்டது.  மேலும் திரு.வி.கே.சட்டநாதன்(சென்னை) திரு.எல்.மணி(வேலூர்) திரு.திருப்பதியான்(திருவண்ணாமலை) ஆகியோர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை தவிர்ககும் பொருட்டு ஏற்கெனவே நீதிமன்ற தீர்பினை பெற்றுள்ள அனைவருக்கும் பொருந்து வகையில் அரசானை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது என்ற செய்தினை தங்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.  பல்வேறு தனிபட்ட தொழிறகல்வி ஆசிரியர்களின் வழக்குகள் மேலும் பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் சார்பாக அரசிடம் முறையீடு தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் சார்பிலும், தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டப்பின் சார்பிலும் தொடர் முயற்சி காரணமாக இந்த அரசானை வெளிவர உள்ளது என்ற செய்தியை தங்களுடன் மகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.   என்றும் ஆசிரியர் பணியில் செ.நா.ஜனார்த்தனன், மாநில பொதுச்செயலாளர் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம், மாநில அமைப்பாளர் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு.  9443345667  மற்றம் திரு.எம்.ராஜாராம், மாநில அமைப்பாளர், திரு.எஸ்.ரெங்கநாதன், திரு.டி.இருதராஜ், திரு.த.ராமச்சந்திரன், திரு.வி.கிருஷ்ணன், திரு.எ.பி.குமணன், மாநில இணைஅமைப்பாளர்கள்.

VOCATIONAL TEXT BOOK FOR XI STD NEW REVISED RELESED on 11.07.2018 






We met the School Education (syllabus) Secretary Dr.D.Udhayachandran, Director of State Counsel for Education Reaserch and Training (SCERT) Dr.G.Arivoli, Director of Government Examination Dr.D.Vasundradevi, JDHS(Exam) Mr.Sethuramavarma JDHS Mr.Radhakrishnan







 
வேலூர் வருகை தநத் பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களை நமது அமைப்பின் சார்பில் சந்தித்து பேசினோம்.


பேசியபோது

6156 பணியிடங்களுக்கு 31.12.2020 வரை மூன்று ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கி அரசு ஆணையிட்டுள்ளது.  3137 தொழிற்கல்வி ஆசிரியர் கணினி ஆசிரியர் பணியிடங்கள் உள்பட அரசாணை எண் 1(டி)எண்.389 நாள் 24.05.2018ன்படி பின்வரும் வரியை அழுத்தி அரசாணை நகலை பெற்றுக்கொள்ளலாம். 
அன்புடன் செ.நா.ஜனார்த்தனன்.944334566

https://sites.google.com/site/janavellore2/6156post-extension-order-31-12-2020








தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பின் மாநில பொதுக்குழு மற்றும் பணிநிறைவு பெறும் மாநில நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா அழைப்பிதழ்

நாள்.    19.05.2018 சனிக்கிழமை காலை 10.00 மணி
இடம்    தஞ்சை மாநகரம் பெசன்ட் அரங்கம்,
                  பழைய பேருந்து நிலையம் அருகில், ஜுபிடர் திரையரங்கம் எதிரில்
மாநில அமைப்பாளர் திரு.த.இராமச்சந்திரன், மாநில இணை அமைப்பாளர் திரு.வி.கிருஷ்ணன், மாநில நிர்வாகிகள் திரு.கே.சம்பத்நாகராசன், (திருவாரூர்) திரு.சோ.சம்பத்(வேலூர்)  மற்றும் தஞ்சை மாவட்ட நிர்வாகிகளுக்கு பாராட்டு

அன்பார்ந்த மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளே தவறாது வருகை தந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் நமது கூட்டமைப்பின் சார்பில் அழைக்கின்றோம்.
இவண், செ.நா.ஜனார்த்தனன், எம்.ராஜாராம் மாநில அமைப்பாளர்கள், எஸ்.ரெங்கநாதன் மாநில நிதிக்காபாளர், டி.இருதயராஜ் மாநில இணை அமைப்பாளர்.

50% judgement copy   plese clik below line and download the pdf file

 

https://sites.google.com/site/janavellore2/50-pension-judgement-copy

தருமபுரி வாயிற்கூட்டம்


The Express Pay order for the Month of April-2018 received from Education department for 6156Post as per Govt.Letter No 8431/SE5(1)/2018-1 Dt.24.04.2018
ஏப்பரல்-2018 ஒரு மாதத்திற்கான விரைவூதிய ஆணை  கிடைக்கப்பெற்றுள்ளது. அரசு கடித எண் 8431/பக5(1)/2018-1 நாள் 24.04.208  நகல் இணைக்கப்பட்டுள்ளது yours Janardhanan sn 23-04-2018





பத்திரிகை செய்தி
                                    நாள்.16.04.2018

தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பின் மாநில உயர்மட்டக்குழு கூட்டம்.

                        தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பின் மாநில உயர்மட்ட குழுவின் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. மாநில அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் மாநில அமைப்பாளர் எம்.ராஜாராம் தலைமை தாங்கினார். மாநில நிதிக்காப்பாளர் எஸ்.ரெங்கநாதன் முன்னிலை வகித்தார்.  முன்னதாக மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் தி.தாகப்பிள்ளை வரவேற்று பேசினார். 

                        மாநில இணை அமைப்பாளர்கள் த.ராமச்சந்திரன், வி.கிருஷ்ணன், டி.இருதயராஜ்,  ஆகியோர் பேசினர்.  பின்னர் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

v      மார்ச்-2018ல் நடைபெற்ற அரசு பொதுத்தேர்வில் 12ஆம் வகுப்பு தொழிற்கல்வி விடைத்தாட்கள் விழுப்புரம் மற்றும் மதுரை ஆகிய இரண்டு மையங்களில் தான் மதிப்பீட்டு மையங்களாக அறிவிக்கப்பட்து இது குறித்து தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் அரசுத்தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி அவர்களையும் மேல்நிலைக்கல்வி இணைஇயக்குநர் சா.சேதுராமவர்மா அவர்களையும் நேரில் சந்தித்து கோரிக்கை குறித்து பேசினர். அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்கள் உடனே உரிய நடவடிக்கை மேற்கொண்டார்கள்  அதன்படி இரண்டு மையங்கள் ஏழு மையங்களாக விரிவுபடுத்தி அறிவித்துள்ளார்கள்.  திருநெல்வேலி - பாளையங்கோட்டை கதிரீட்டல் மேல்நிலைப்பள்ளி, மதுரை - கார்மேல் மேல்நிலைப்பள்ளி, கோயமுத்தூர் – விமல்ஜோதி மெட்ரிக் மேலநிலைப்பள்ளி, திருச்சி – புனித ஜேம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விழுப்புரம் – அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தருமபுரி – விஜய் வித்யாலயா மெட்ரிக் மேலநிலைப்பள்ளி, சென்னை – தாம்பரம் ஜெயகோபால் கரோடியா தேசிய மேல்நிலைப்பள்ளி ஆகிய ஏப மையங்களில் மதிப்பீட்டு பணி நடைபெற உள்ளது. அரசுத்தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி அவர்களுக்கும் மேல்நிலைக்கல்வி இணைஇயக்குநர் சா.சேதுராமவர்மா அவர்களுக்கும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வரவேற்பினையும் நன்றியும் தெரிவித்துக்கொள்கின்றோம்.  

v      பதவி உயர்வில்லா பணியிடங்களுக்கு தேர்வு நிலை தரஊதியம் வழங்க நிதித்துறை வெளியிட்ட ஆணைகள் மற்றும் அரசு கடிதங்களின் படி தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் வழங்கலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பினை நடைமுறைபடுத்திட தமிழக அரசினை வேண்டுகின்றோம்.

v      தொகுப்பூதிய காலத்தினை கணக்கிட்டு ஓய்வூதிய வழங்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை உடனே நடைமுறைபடுத்திட வேண்டுகின்றோம்.

                   

(செ.நா.ஜனார்த்தனன், மாநில அமைப்பாளர், 9443345667)

Jtf;fk;
-9?1985                                              gjpt[ vz;/240?05

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி

தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு

TAMIL NADU HIGHER SECONDARY SCHOOL

VOCATIONAL TEACHERS FEDARATION (VTF)

bjhlh;g[ Kfthp : vz;/25.,uz;lhtJ FWf;FbjU. lhf;lh; ,uhjhfpU@;zd; efh;. ntY}h;-6/

 செ.நா.ஜனார்த்தனன்         எம்.ராஜாராம்               த.இராமசந்திரன்

மாநில அமைப்பாளர் 9443345667           மாநில அமைப்பாளர் 9443831100                  இணை அமைப்பாளர் 9443289280

 வி.கிருஷ்ணன்             எம்.இருதயராஜ்            எஸ்.ரெங்கநாதன்   

         இணை அமைப்பாளர் 9976996743       இணை அமைப்பாளர் 9842140182      நிதிக்காப்பாளர் 9443448139                           

பத்திரிகை செய்தி                                     நாள்.13.04.2018

தொழிற்கல்வி பாடத்திற்கும் 7 மையங்களில் மதிப்பீட்டு பணி

அரசுத்தேர்வுகள் இயக்குநருக்கு

தொழிற்கல்வி ஆசிரியர் கூட்டமைப்பு வரவேற்பு

                  மேல்நிலை தொழிற்கல்வி பாடங்கள் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு விடைத்தாட்கள் மதிப்பீட்டு மையங்கள் கடந்த ஆண்டினை போலவே ஏழு மையங்களாக விரிவுபடுத்தி அறிவித்துள்ள அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களுக்கு தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு வரவேற்பினை தெரிவித்துள்ளது. 

                    இது குறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி  தொழிற்கல்வி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.  மார்ச்-2018ல் நடைபெற்ற அரசு பொதுத்தேர்வில் 12ஆம் வகுப்பு தொழிற்கல்வி விடைத்தாட்கள் விழுப்புரம் மற்றும் மதுரை ஆகிய இரண்டு மையங்களில் தான் மதிப்பீட்டு மையங்களாக அறிவிக்கப்பட்து இது குறித்து தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் அரசுத்தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி அவர்களையும் மேல்நிலைக்கல்வி இணைஇயக்குநர் சா.சேதுராமவர்மா அவர்களையும் நேரில் சந்தித்து கோரிக்கை குறித்து பேசினர்.

                    அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்கள் உடனே உரிய நடவடிக்கை மேற்கொண்டார்கள்  அதன்படி இரண்டு மையங்கள் ஏழு மையங்களாக விரிவுபடுத்தி அறிவித்துள்ளார்கள்.  திருநெல்வேலி - பாளையங்கோட்டை கதிரீட்டல் மேல்நிலைப்பள்ளி, மதுரை - கார்மேல் மேல்நிலைப்பள்ளி, கோயமுத்தூர் – விமல்ஜோதி மெட்ரிக் மேலநிலைப்பள்ளி, திருச்சி – புனித ஜேம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விழுப்புரம் – அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தருமபுரி – விஜய் வித்யாலயா மெட்ரிக் மேலநிலைப்பள்ளி, சென்னை – தாம்பரம் ஜெயகோபால் கரோடியா தேசிய மேல்நிலைப்பள்ளி ஆகிய ஏப மையங்களில் மதிப்பீட்டு பணி நடைபெற உள்ளது. அரசுத்தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி அவர்களுக்கும் மேல்நிலைக்கல்வி இணைஇயக்குநர் சா.சேதுராமவர்மா அவர்களுக்கும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வரவேற்பினையும் நன்றியும் தெரிவித்துக்கொள்கின்றோம்.  

                   

(செ.நா.ஜனார்த்தனன், மாநில அமைப்பாளர், 9443345667)


புதுதில்லியில் நடைபெற்ற இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பில் தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் பங்கேற்பு




Pay Order From 01-01-2018 to 31-03-2018 as per the proceedings of the Director of School Education Rc.No.085220/L/E3/2017 Dated:11.01.2018 to download please clik the line below --------  
by Janardhanan SN, State General Secreary9443345667 
https://sites.google.com/site/vocationalteacherkazhagam/6156postcontinuationjanmarch2018dseorderdated11-01-20

தினமணி வேலுர்
தினமலர் வேலூர்
தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ்
600 காலி இடங்களை நிரப்ப கோரி போராட்டம் நடத்த தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்விஆசிரியர் கழகம் முடிவு
  தொழிற்கல்வி பாடத்திற்கு, 600 அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்கள் பாதிக்கப்படுவதாக, ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
 தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்விஆசிரியர் கழகத்தின், மாநில பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இது குறித்து, தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில பொது செயலர், ஜனார்த்தனன் கூறியதாவது: 
அரசு பள்ளிகளில், 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், தொழிற்கல்வி பாடங்களில் படிக்கின்றனர். இதற்காக, 2,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். 
ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கான, 600 இடங்கள், 10 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், வகுப்புகள் நடத்தப்படாமல், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, 600 காலியிடங்களை நிரப்ப, பள்ளிக்கல்வித் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
மேல்நிலை தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, 30 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பதவி உயர்வை தாமதமின்றி வழங்க வேண்டும்.
ஒன்பது மற்றும் 10ம் வகுப்புகளில், அனைத்து பள்ளிகளிலும், தொழிற்கல்வி கட்டாய பாடமாக்கப்பட்டு, அதற்காக புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

THANKS TO DINAMALAR CHENNAI

THE HINDU 22-01-2018 CHENNAI
TAMIL NADU

‘Introduce vocational subjects in all schools’

Only 1,605 of 2,400 schools in the State offer the subjects, say teachers
The Tamil Nadu Higher Secondary School Vocational Teachers Kazhagam has asked for vocational subjects to be introduced in all 2,400 higher secondary schools in the State.
“At present, only 1,605 of the 2,400 higher secondary schools offer vocational subjects for the students. As a part of the curriculum revamp for State board schools, the vocational subjects syllabus too has been revamped and we hope that this is introduced in all the higher secondary schools,” said S.N. Janardhanan, State general secretary.

At the State general body meeting on Sunday, office-bearers of the association resolved to hold a demonstration ahead of the Assembly session to draw attention to their concerns about their pay scale.
“As vocational teachers fall in the non-promotion category, teachers have gone without promotions for the last 30 odd years. We have asked that the State government either to give us promotion or hike our pay as a part of the non promotion category,” said Mr. Janardhanan. The association further demanded that nearly 600 vacant posts for vocational teachers be filled up.


Dinamalar, Vellore 19-01-2018


பொதுக்குழு கூட்ட அழைப்பு
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் 
நாள். 21.1.2018 அன்று 
பிற்பகல் 3 மணியளவில் 
இடம்    சென்னை-2,  எல்லீஸ் சாலை,41, முக்தாருன்னீசா பேகம்  தெருவில் அமைந்துள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 
TNPTF கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. Phone: 044-28411553 
பொருள்... 1. STFI என்றழைக்கப்படும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தீர்மானங்கள், 
2. ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் நம் பங்கு செயல்பாடுகள் ,  
3. தொழிற்கல்வி ஆசிரியர் கூட்டமைப்பின் செயல்பாடுகள் விவரம் மற்றும் பல்வேறு தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களுடன் இணைந்து செயலாற்றிடுவது குறித்த விவாதம்
4. 2017ஆம் ஆண்டின் செயல்பாடுகள், 
5. 2018ஆம் ஆண்டில் மேற்கொள்ள வேண்டிய செயல்கள், 
6. 50% தொகுப்பூதிய பணிக்காலம் ஓய்வூதியம் பெற கணக்கிட கோரும் 
வழக்கின் தீர்புகள் இதனை நடைமுறைபடுத்திட எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், 
7.தேர்வு நிலை தர ஊதியம் பதவி உயர்வில்லா பணியிடங்களுக்கு உள்ள அரசு கடித செயல்பாடுகள், 
8. Cross Major Incentive கோரிக்கையின் நிலை,  
9.பணிநிறைவு பெறும் நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா நடத்த நாள் நிர்ணயித்தல்,  
10.புதிய நிர்வாகிகள் தேர்வு, இதர
உள்ளிட்ட பொருள் குறித்து விவாதித்து செயலாற்றிட வேண்டியிருப்பதால் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் தவறாமல் பங்கேற்று சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இவண்,
த.ராமச்சந்திரன், மாநிலத்தலைவர்,
செ.நா.ஜனார்த்தனன்,மாநிலப் பொதுச்செயலாளர் Phone: 9443345667
எஸ்.ரெங்கநாதன்,மாநிலப் பொருளாளர்
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக
மாநில பொதுக்குழு கூட்ட அழைப்பிதழ்
நாள். 21.01.2018 ஞாயிற்று கிழமை பிற்பகல் 3.00
இடம் தமிநாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அலுவலகம், சென்னை
              எண்.41, முக்தாருன்னிசா பேகம் தெரு, எல்லிஸ் ரோடு, சென்னை-2
             தொலை பேசி 044-28583649
மாநில மாவட்ட நிர்வாகிகளே அனைவரும் தவறாது வருகை
அன்புடன் செ.நா.ஜனார்த்தனன், மாநில பொதுச்செயலாளர் 9443345667

------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு
School Teacher's Federation of India (STFI)
தமிழ் மாநில குழு மாநில நிர்வாகிகள் கூட்ட அழைப்பு
நாள்.21.01.2018 ஞாயிற்று கிழமை காலை 10 மணி
இடம் தமிநாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அலுவலகம், சென்னை
              எண்.41, முக்தாருன்னிசா பேகம் தெரு, எல்லிஸ் ரோடு, சென்னை-2
             தொலை பேசி 044-28583649

மாநில தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர்
ஆகிய மூவர் மட்டுமே பங்கேற்க அனுமதி
அன்புடன் செ.நா.ஜனார்த்தனன், மாநில பொதுச்செயலாளர் 9443345667
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Dinamalar Jaithu Kattuvom 




MALAI MALAR


பத்திரிகை செய்தி                                  நாள்.. 17.12.2017

தொழிற்கல்வி ஆசிரியர்கள் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் நீதிமனற் தீர்பாணைகளை, சட்ட விதிகளை, அரசாணைகளை செயல்படுத்தி 3அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் கோரிக்கை முழக்க ஆர்ப்பட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் வெ.ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.  தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் போட்டத்தினை துவக்கிவைத்து பேசினார். 

மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.ரெங்கநாதன், வேலூர் மாவட்ட தலைவர் எஸ்.சிவராஜ், செயலாளர் சோ.சம்பத், பொருளாளர் எம்.பாண்டுரெங்கன், ஜி.பாண்டியன், என்.ரவி, எஸ்-துரைராஜ், ஜி.முத்துக்குமரன், தி.தாகப்பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். 

v  சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய பல்வேறு தீர்புரைகளை நடைமுறைபடுத்தி தொழிற்கல்வி ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தில் 50 சதவிகிதம் பணிக்காலத்தினை கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்கிட கோருகின்றோம்.

v  அரசாணை எண்.23 மற்றும் 263 மற்றும் பல்வேறு அரசுக்கடிதங்களின் தெரிவிததுள்ளவாறு பதவி உயர்வில்லா பணியிடங்களுக்கு தேர்வு நிலை தர ஊதியம் நிர்ணயம் செய்து வெளியிட்டுள்ள விதிகளின் படி தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என தெளிவுரை வழங்கிட வேண்டுகின்றோம்.

v  தமிழகத்தில் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் வெவ்வேறு பாடத்தில் உயர்கல்வி பெற்றிருந்தால் இரண்டு ஊக்க ஊதிய உயர்வு வழங்கியிருப்பது போல வெவ்வேறு பாடத்தில் உயர்கல்வி பெற்றுள்ள தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் அரசாணை எண் 240ஐ திருத்தம் செய்து வெளியிட வேண்டுகின்றோம்.

கடலூர் மாவட்ட செயலாளர் எஸ்.மோகன்குமார், ச.சீனிவாசன, தருமபுரி எஸ்.அழகரசன், சென்னை மாவட்ட செயலாளர் கே.ராஜபாண்டி, மாநில மகளிர் அணி செயலாளர் டி.வைஜெயந்தி,  தஞ்சாவூர் எ.முருசேன், எஸ்.அன்னபூரணி, இரா.துரைராஜ், சி.அண்ணாத்துரை, கே.நவநீதம் தேனி மாவட்ட தலைவர் எஸ்.முருகேசன், செயலாளர் கா.லியாகத்அலி, காஞ்சிபுரம் சீனி.செல்லப்பா, ஆர்.எல்லப்பன், திருவாரூர் வீரமணி வி.முருகவேல் வேலூர் ச.சச்சிதானந்தம் ஜெ.சுந்தரராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

முடிவில் செ.பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

    ஆர்ப்பாட்டம் காலை 10 மணி துவங்கி பிற்பகல் 1.30 மணிவரை நடைபெற்றது. 

(செ.நா.ஜனார்த்தனன், மாநில பொதுச்செயலாளர், 9443345667)



தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில்
மாநில அமைப்பாளர்கள் திரு.செ.நா.ஜனார்த்தனன், திரு.எம்.இராஜாராம்,
இணை அமைப்பாளர்கள் திரு.த.இராமச்சந்திரன், திரு.வி.கிருஷ்ணன், திரு.டி.இருதயராஜ்
ஆகியோர் இன்று 13.12.2017 காலை சென்னை பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர் ரெ.இளங்கோவன், இணை இயக்குநர் தொழிற்கல்வி திருமதி.வி.சுகன்யா,
மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநர் முனைவர் ஜி.அறிவொளி,
இணை இயக்குநர் முனைவர் பொன்.குமார்,
மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர் திரு.அ.கருப்பசாமி,
தமிழக அரசின் நிதிதுறை துணை செயலாளர் அவர்களையும் நேரில் சந்தித்து 
1. தொகுப்பூதிய காலத்தினை கணக்கிட்டு ஓய்வூதியம்
2. தேர்வு நிலை தர ஊதியம் ரூ.5400
3. கிராஸ் மேஜர் இன்சன்டிவ் கோருதல்
4. பாட புத்தகங்கள் வடிவமைப்பில் தொழிற்கல்வி
குறித்து விரிவான மனு அளித்து பேசினோம் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தனர்.
7
GO NO.687 DATED : 13.11.2017 POST CONTINUATION ORDER FOR 680 POST OF VOCATIONAL TEACHER
GRADE -1FROM 1.10.2017 TO 31.09.2018 ISSUED to downlaod please clik the line below

https://sites.google.com/site/vocationalteacherkazhagam/680post-from-1-10-2017dse-pro



கணக்குப்பதிவியலும் தணிக்கையியலும் மற்றும் அலுவலக மேலாண்மை ஆகிய இரண்டு பாட பிரிவுகள் நீக்கப்படவில்லை.   பாடதிட்டக்குழுவில் கணக்குப்பதிவியலும் தணிக்கையிலும் பாடத்திற்கான உறுப்பினராக நான் உள்ளேன் பாடதிட்டங்கள் தயாரிக்கப்பட்டு அரசின் பரிசீலனையில் உள்ளது சில திருத்தங்களுடன் விரைவில் வெளிடப்பட உள்ளது.  தினமலர் நாளேட்டில்  நீக்கப்பட்டுள்ளது என்ற செய்தி தவறான புரிதலால் வெளியிடப்பட்டுள்ளது.,
மேலும் 27.11.2017 முதல் 01.12.2017 வரை 5 நாட்கள் இந்த இரண்டு பாடப்பிரிவுகள் உள்ளிட்ட தொழிற்கல்வி பாடப்பிரிவுகளுக்கான பாடப்புத்தங்கள் எழுதும் பணி நடைபெற்று வருகிறது.
அன்புடன் செ.நா.ஜனார்த்தனன்


680 தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு 01.10.2017 முதல் 31.12.2017 வரை
3மாதங்களுக்கு பணி நீட்டிப்பாணை 
பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எட்.53921/L3/ 2017 நாள் 27.09.2017 

https://sites.google.com/site/vocationalteacherkazhagam/680post-from-1-10-2017dse-pro 


Dinamani Today


7TH PAY PANNEL REPORT SUBMITTED


வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யக்கூடாது என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டு உள்ளது.   செப்டம்பர் 21, 2017, 04:07 PM  மதுரை,  அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்  போராட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி மதுரையை சேர்ந்த வக்கீல் சேகரன்  மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு இடைக் கால தடை விதித்தனர். தடையை மீறி போராட்டம் தொடர்ந்ததால் கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனு மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை கடந்த 15-ந்தேதி கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்டனர். அதன் பேரில் நிர்வாகிகள் சுப்பிரமணியன்,  தாஸ், மோசஸ்  ஆஜரானார்கள். அவர்களிடம் போராட் டத்தை வாபஸ் பெற்று உடனடியாக வேலைக்கு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நீதிபதிகள்  சசிதரன், சுவாமிநாதன் எச்சரித்தனர். அதைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.

அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் அரசு ஊழியர்களின் கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்து வதற்காக  தமிழக அரசின் தலைமைச் 
செயலாளர் 21-ந்தேதி (இன்று) ஆஜராக வேண்டும் என்று உத்தர விட்டனர். அதன்படி தலைமைச் செயலாளர்  கிரிஜா வைத்தியநாதன் இன்று மதுரை ஐகோர்ட்டில் ஆஜரானார்.

12.30 மணியளவில் வழக்கு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன், ஜாக்டோ-ஜியோ சார்பில் மூத்த வக்கீல் பிரசாத் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஊதியக்குழு அறிக்கையை அமல்படுத்த சரியான கால அளவு குறித்து ஆலோசனை நடத்தி தெரிவிக்குமாறு அரசு தரப்பிடம் கூறினர்.  

வேலை நிறுத்ததில் ஈடுபட்ட  அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யக்கூடாது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை நிறுத்திவைக்கவும்  என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டு உள்ளது. வேலை நிறுத்த நாட்களை வேலை செய்து ஈடாக்கி கொள்ள வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்த நாட்களை சனிக்கிழமைகளில் வேலை செய்து ஈடு செய்ய வேண்டும் என  நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

நிபுணர் குழு அறிக்கை அடிப்படையில் 7ஆவது ஊதியக் குழுவை அமல்படுத்த எத்தனை நாட்களாகும் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அக். 13ஆம் தேதிக்குள் தமிழக அரசு முடிவு எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டால் அதற்கான இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டு  உள்ளது.

THANKS TO DAILY THANTHI 21-09-2017 -------  JANARDHANAN SN GS, TNHSSVTK
20-09-2017ல் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் ஆணை 

 








22-08-2017 ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் தொழிற்கல்வி ஆசிரியர் இயக்க கூட்டமைப்பு





  1. PLUS ONE MODEL QUESTION PAPER PUBLISHED | 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.
  2. PLUS ONE PUBLIC EXAM MARCH 2018 | பிளஸ் 1 பொது தேர்விற்கான மாதிரி வினாத்தாள் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    https://tnquestionpapersdownload.blogspot.in/2017/08/plus-one-model-question-paper-download.html

ஜேக்டோ ஜியோ போராட்டத்தில் நம் பங்களிப்பு 





 CHENNAI 06-08-2017

Teachers, government staff protest

They demand rectification of anomalies in pay panel report and restoration of old pension scheme   Thousands of members of the Joint Action Committee of Tamil Nadu Teachers Organisations and Government Employees Organisations (Jactto-Geo) participated in a demonstration in the city on Saturday.   P. Ilangovan, one of the State conveners of Jactto-Geo, said there were anomalies in the implementation of the pay commission recommendations in 2006 as well. “This has to be rectified and we are demanding an interim relief of 20%. We have demanded that the old pension scheme should be brought back instead of the contributory pension scheme for employees,” he said. Token strike   Members of the Jactto-Geo have said that if their demands were not met, they would go on a token strike on August 22 and if the government did not invite them for talks even then, they would go on an indefinite strike from September 7 throughout the State.     As many members had made their way to Chennai from across the State, traffic in several areas such as T. Nagar, Adyar, Mylapore, and Triplicane was thrown out of gear following the demonstration at Chepauk.  A number of private buses carrying the protesters were seen turning in towards Kamaraj Salai and Anna Salai.   Many vehicles were parked on the Marina near the Light House and the protesters took to the streets, making it tough for the police to regulate the vehicular traffic.    Several teachers, who were travelling from various parts of Vellore district to take part in the protest in Chennai, were stopped by police. S.N. Janardhanan, State executive committee member of Jactto-Geo, said teachers travelling in nearly 50 vehicles were stopped by the police at the Walajah toll gate.  
300 teachers arrested  
“About 300 teachers were arrested and taken to a marriage hall near Walajah. Similarly, nearly 200 teachers were stopped on Ranipet Bypass and taken to a marriage hall. Another 100 travelling from Gudiyatham were stopped in Vellore, and those travelling from Dharmapuri district were stopped at the toll gate near Vaniyambadi,” he said.  As many as 100 retired government employees staged a demonstration in front of the Coimbatore Taluk office to show their solidarity for the agitating members of Jactto-Geo in Chennai. Following police action, teachers staged a protest at the Walajah toll gate following which the arrested teachers were let off.  He added that the teachers then proceeded to Chennai and took part in the protest. He condemned police action on teachers.

தொழிற்கல்வி ஆசிரியர் கூட்டப்பு ஜேக்டோ-ஜியோ பேரணியில் பங்கேற்கும்








மாநில பொதுக்குழு கூட்ட அழைப்பிதழ் 
இடம்        சரஸ்வதி கிருஷ்ணசாமி நிலையம்
                   தென்னூர் இந்தி பிரச்சார சபா அருகில் 
                   திருச்சி - 620008.

நாள்.              30.07.2017  நேரம் காலை 10 மணி

பொருள்       நீதிமன்ற தீர்பானை தொடர் செயல்பாடு

அனைவரும் தவறாமல் வருகை தர வேண்டுகின்றோம்.

செ.நா.ஜனார்த்தனன் மற்றும்  எம்.ராஜாராம்  
மாநில அமைப்பாளர்கள்.


NELLAI MEETING NEWS PAPERS



பள்ளிக்கல்வி மான்ய கோரிக்கை குறித்து நமது கருத்து






பதினோராம் வகுப்பு வினாத்தாள் வடிவைக்கும் குழுவின் கூட்டம்
அனைத்து தொழிற்கல்வி பாடங்களுக்கும் வினாத்தாள் வடிவமைக்கும் பணி நடைபெற்று வருகிறது மாநில கல்வி ஆராய்ச்சி பயிற்சி இயக்குநர் முனைவர் ஜி.அறிவொளி அவர்கள் தலைமையில் இணை  இயக்குநர் திரு.பொன்.குமார் அவர்களின் வழிகாட்டுதல் படி நடைபெற்று வருகிறது




 
அன்பார்ந்த மாநில மாவட்ட நிர்வாகிகளே, உறுப்பினர்களே நண்பர்களே வணக்கம்,

7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைபடுத்திட ஊதிய மாற்றம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள அலுவலர் குழுவின் செயலாளர் அவர்களின் அழைப்பின் பேரில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் சார்பிலும், தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பிலும் கலந்து கொண்டு பேசினோம் 60 பக்க அறிகையினை சமர்பித்தோம். ஆவண செய்வதாக உறுதியளித்தனர்.

செ.நா.ஜனார்த்தனன், மாநில பொதுச்செயலாளர் மற்றும் மாநில அமைப்பாளர்




 


தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிபவர்களுக்கு நிர்வாக மாறுதல் வழங்கி இயக்குனர் உத்தரவு

Posted: 15 May 2017 10:23 AM PDT

DSE - 38 HS / HSS HMs PROMOTED AS DEO REG ORDER CLICK HERE...
 




Thanks to Shakshi Telugu Daily


Thanks to Andhrajyothy

we met the school eduction minister and presented the memorendam 





DGE G.O NO 270 DT 24.04.2017 - தேர்வுக் காலப் பணிகள் மற்றும் விடைத்தாள் திருத்தும் முகாம் பணிகள் மேற்கொள்ளும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு உழைப்பூதியம் / மதிப்பூதியம் உயர்த்தி வழங்குதல் - அரசாணை தமிழக அரசால் வெளியிடப்பட்டது.

http://cms.tn.gov.in/sites/default/files/go/schedu_t_270_2017_1D.pdf















DINAKARAN 07.04.2017

DINAMALAR Chennai 08.04.2017

அலுவலர் குழுவின் தலைவர் மற்றும் தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் உயர்திரு.கே.சண்முகம் அவர்கள் சங்க நிர்வாகிகளுகு அனுப்பியுள்ள கடிதத்தில் 7வது ஊதியகுழு பரிந்துரைகளை நடைமுறைபடுத்திட 31.03.2017க்குள் சங்கத்தின் சார்பிர் கோரிக்கை மனுக்களை அனுப்ப  கோரியிருந்தார் அதனடிப்படையில் தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் மற்றும் கூட்டமைப்பின் சார்பில் 29.03.2017ல் கடிதம் 58பக்க ஆவணங்களுடன் இணைத்து அனுப்பியுள்ளோம்.

THANKS TO THE New Indian Express, Dinamalar, Dhinasangu







தொழிற்கல்வி ஆசிரியர் உள்ளிட்ட 6156 பணியிடங்களுக்கு டிசம்பர் 2017 வரை பணிநீட்டிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.  அரசாணை எண். 151 நாள் 27.02.2017 இவ்ணையினை பின்வரும் வரியினை கிளிக் செய்து நகல் டவுண்லோடு செய்து கொள்ளலாம். 

https://sites.google.com/site/vocationalteacherkazhagam/arr

DEAR SIR FOR ANY INFORMATION PLEASE MAIL US.  the maild ID is : janardhanansn@gmail.com

As per G.O.Rt.No.799 Public (special.A) Department Dated: 06.03.2017
our NEW SCHOOL EDUCTION DEPARTMENT SECRETARY IS MR.T.UDHAYACHANDRAN 

T. Udhayachandran (Tamilத. உதயச்சந்திரன்) is an Indian Administrative Service officer and Secretary of Finance department, Government of TamilNadu. He is also director in-charge of Tamil Virtual Academy.

Udhayachandran was born in Namakkal District and graduated in BE(Electronics &Communication Engineering). He belongs to 1995 batch of Indian Administrative Service and he was one of the youngest officers with age of 23 years.[1] His interest varies from Tamil literature, contemporary history, anthropology and technology related areas.

When he was Collector in Erode district he initiated massive education loan scheme for students.[2] He successfully conducted local body elections after ten years to ensure social justice in three rebel village panchayats PappapattiKeeripatti and Nattarmangalam in Madurai district.[3]

He also holds various posts in government organization including Tamil Nadu Textbook Corporation Ltd, Tamil Nadu Water Supply and Drainage BoardTamil Nadu Newsprint and Papers Limited, Elnet Technologies Ltd and Rural Development and Panchayat Raj Department.[4][5] He also served as Chairman and Managing Director of Tamil Nadu Small Tea Growers Industrial Cooperative Tea Factories Federation Ltd (INDCOSERVE), Coonoor.[6]

In 2011 when he was serving as TNPSC Secretary, he was not permitted to undertake the recruitment process by Chairman and other members. He raised a complaint against it. Directorate of Vigilance and Anti-Corruption registered graft case against then TNPSC Chairman, Sellamuthu and all the 13 Members of the TNPSC following allegations.[7] In 2012, R. Sellamuthu submitted his resignation to Governor.[8] Later, He brought innovative schemes like Online Application System and Computer Based Test to ensure transparency in selection process[9]

THE HINDU, CHENNAI: FEBRUARY 23, 2011     The government has appointed D.Sabitha as the new School Education Seretary for the State.  She will be replace in er current post as Inspector General of Registrations.  D.Jothi Jagarajan has been transferred from his post as school leducation seretary and posted to act as seretary state Human Rights Commission. 

FROM JAN-2017 TO MARCH -2017
PAY CONTINUANCE OF 1990 POST OF VOCATIONAL TEACHER GRADE-1 INCLUDES IN 6156 TOTAL NUMBER OF POST.  AS PER GO NO 187 DT 05-06-2015 AND AS PER DSE PROCEEDINGS RC.NO.001231/L/E3/2016 DATED 27.12.2016 

https://sites.google.com/site/vocationalteacherkazhagam/jan-mar-2017-pay-certi

wish you all happy Pongal-2017


VELLORE DIST, KATPADI GGHS SCHOOL,


NEWS

 

Thanks Dinamalr Vellore

Thanks Dinamalr Chennai,Madurai, Coimbature, Pondy Editions

Thanks The New Indian Express


DINAMANI VELLORE





அரசு ஊழியர்களின் 9 மாத பேறுகால விடுப்புக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பேறுகால விடுப்பு 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக அதிகரித்து அரசாணை 

Posted: 07 Nov 2016 08:41 PM PST     http://cms.tn.gov.in/sites/default/files/go/par_e_105_2016.pdf

THE DIRECTOR OF SCHOOL EDUCATION LETTER


THANKSTO DINAMALAR 29-09-2016





SIGARAM THOTTA NALLAASIRIYAR VIRUDU (BEST TEACHER AWARD) BY ROTARY CULB OF KATPADI, VELLORE





     









DINAMALAR CHENNAI 20-09-2016

DINAMANI 16-06-2016

DINAMANI 13-09-2016 TODAY (Chennai, Villupuram, Dharmapuri, Nagapattinam, Trichy, Nellai Editions)




DR.RADHAKRISHNAN AWARD BY THE GOVT. OF TAMILNADU.  BEST TEACHER AWARD TO THE FOLLOWING VOCATIONAL TACHERS 
1. M.KANNAN, VOC.TR. GHSS PARAMAKUDI, RAMNAD
2. A. VELAYUDAM, VOC.TR. GHSS, NEMILI, VELLORE
3. V. PONNAMBALAM, VOC.TR. GHSS, THIRUPORUR, KANCHEEPURAM
4. RAJKUMAR, VOC TR, CS GGHSS, VILLUPURAM
5. HARIKRISHNAN, PINDLAY GOVT HSS MANNARGUDI, THIRUVARUR
6. V.KANNAN KPVP GHSS, KOTTAR, KANIYAKUMARI
WE WISH THE TEACHER 





VOCATIONAL DETAILS CALLD BY DSE/JDV

https://sites.google.com/site/vocationalteacherkazhagam/vocational-details-calld-by-dse-befor24-08-2016

news at thiruvarur 






THIRUVARUR
தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் இரண்டு ஊக்க ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை

 

First Published : 15 August 2016 03:08 AM IST

 

 

தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் இரண்டு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டுமென தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.

திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாவட்ட பொதுக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொழிற்கல்வி ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தை ஓய்வூதியம் பெற தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும். தொழிற்கல்வி ஆசிரியர்களின் தேர்வுநிலை தரஊதியம் ரூ. 5,400 என தெளிவுரை ஆணை வழங்க வேண்டும்.

தமிழகத்தில் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் வெவ்வேறு பாடத்தில் உயர்கல்வி பெற்றிருந்தாலும் இரண்டு ஊக்க ஊதிய உயர்வு வழங்கியிருப்பது போல, தொழிற்கல்வி ஆசிரியர்களும் வெவ்வேறு பாடத்தில் உயர்கல்வி பெற்றுள்ளதால், அவர்களுக்கும் இரண்டு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 மாவட்டத் தலைவர் ஏ.பி. குமணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், செயலர் கே.எஸ். சம்பத்நாகராஜன், மாநில துணைத் தலைவர் ஜெ. பிரபு, மாவட்ட பொருளர் வி. உத்தமன், மாநில அமைப்பாளர்கள் செ.நா. ஜனார்த்தனன், எம்.ராஜாராம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி. முருகவேல், மாவட்ட அமைப்புச் செயலர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.







TACTO NEWS TODAY


DISTRICT LEVEL MEETING INVITATION

DIST.                                PLACE                         DATE, TIME

THIRUVARUR               VPK LODGE                14-08-2016 SUNDAY 10 AM

WE MET OUR STATE FINANCE ADDL.SECRETARY, JOINT SECRECTARY, SCHOOL EDUCATION DEPARTMENT PRINCIPAL SECRETARY , DEPUTY SECRETARY, DIRECTOR OF SCHOOL EDUCATION, AND JOINT DIRECTOR(VOCATIONAL EDCUATION) TODAY WITH TACTO CO-ORDINATER P.AROKKIYADOSS, VTF CONVENER S.N.JANARDHANAN, JOINT CONVENER V.KRISHNAN, EC MEMBER M.ESSAKKIMUTHU, AND TACTO EC MEMBER MURUGAN            
04-08-2016

STATE GB NEWS 

THELUGU DAILY SHAKSHI





















ZONAL AND DISTRICT LEVEL MEETING INVITATION

DIST.                                PLACE                         DATE, TIME
VELLORE                      GGHSS KATPADI      17-07-2016  Sunday 10 am

TIRUVANNAMALAI    GGHSS POLUR           24-07-2016 SUNDAY 10 AM
DHARMAPURI              GBHSS, Dharmapuri   24-07-2016 Sunday 10 am
THIRUVARUR               VPK LODGE                14-08-2016 SUNDAY 10 AM
State GB                            Bishap Heber HSS Trichy 31-072016 sundary 10 am


 Thanks to the hindu tamil

Thanks to DailyThanthi

தொழிற்கல்வி ஆசிரியர் கூட்டமைப்புக் கூட்டம்

 

போளூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தொழிற்கல்வி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
 கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் சந்தானகிருஷ்ணன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில அமைப்பாளர் ஜனார்த்தன், இணை அமைப்பாளர் சம்பத் ஆகியோர் கலந்துகொண்டனர். 
 கூட்டத்தில் வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு இஸ்லாமியா மேல்நிலைப் பள்ளியில் தொழிற்கல்வி ஆசிரியரின் தொகுப்பூதியம் மற்றும் பகுதிநேர பணிக் காலத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் பெற கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என அறிவித்த அரசுக்கு நன்றி தெரிவித்தும், தொழிற்கல்வி ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தினை ஓய்வூதியம் பெற அரசாணை வெளியிட வேண்டியும், தொழிற்கல்வி ஆசிரியர்களின் தேர்வுநிலை தர ஊதியம் ரூ.5400 என வழங்கவேண்டும் என வலியுறுத்துவது 
 என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
 மாவட்டப் பொருளாளர் சம்பத், செயலாளர் ஞானசம்பந்தன், மாவட்ட நிர்வாகிகள் சங்கரபாண்டியன், விஜயா, பழனியம்மாள், அயூப்கான், செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


 THANKS TO Today Dinamalar and Kalaikathir State Edition 




thanks to DINAMALAR 18-07-2016


THANKS TO MALAIMALAR 17-07-2016







 

தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தல்
By வேலூர் DINAMANI VELLORE First Published : 18 July 2016 12:04 AM IST
வெவ்வேறு பாடத் திட்டத்தில் உயர்கல்வி படித்த தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு அரசு இரண்டு ஊக்க ஊதிய உயர்வு வழங்க மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு மண்டல பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநில அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை வகித்தார். மாநில இணை அமைப்பாளர் வி.கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் கோ.சம்பத் வரவேற்றார்.
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு இஸ்லாமியா மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியரின் தொகுப்பூதிய மற்றும் பகுதி நேர பணிக் காலத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் பெற கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுமென ஆணையிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
வெவ்வேறு பாடத்தில் உயர்கல்வி முடித்த தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் இரண்டு ஊக்க ஊதிய உயர்வு வழங்குவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VELLORE ZONE MEETING AT GGHSS KATPADI ON 17-07-2016 10AM

TAMILNADU VOCATIONAL TEACHERS FEDERATION MET OUR FINCANCE MINISTER HON'BLE O.PANNERSELVAM, SCHOOL EDUCATION MINISTER HON'BLE P.BENJAMIN, JOINT SECRETRY FINACE AND EDUCATION, DIRECTOR OF SCHOOL EDUCATION, DIRECTOR OF METRI, DIRECTOR NONFORMAL EDUCATION
BY S.N.JANARDHANAN, M.RAJARAM, D.RAMACHANDRAN, V.KRISHNAN, S.RENGANATHAN, IRUDAYARAJ




















MR.B.RAGAVENDRAN PENSION GO.148 DT.22.06.2016 PLEASE DOWNLOAD THE GO TO THE GIVEN LINE 

https://sites.google.com/site/vocationalteacherkazhagam/go148dt220616br

thanks to DINA ETHAL


THANKS TO THE HINDU TAMIL NEWS PAPAER


சனி, ஜூலை 9, 2016
பள்ளிக்கல்வி இணை இயக்குநர்கள் 2 பேருக்கு பதவி உயர்வு



பள்ளிக் கல்வித்துறையில் இணை இயக்குநர்களாகப் பணி யாற்றி வந்த ஏ.கருப்பசாமி (பணியாளர்), எம்.பழனிச்சாமி (மேல்நிலைக்கல்வி) ஆகியோர் இயக்குநர்களாகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

கருப்பசாமி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநராகவும், பழனிச்சாமி, மாநில முறை சாரா வயதுவந்தோர் கல்வி இயக்குநராகவும் நியமிக்கப் பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் டி.சபீதா புதன்கிழமை வெளியிட்டார்.

புதிய இயக்குநர்களுக்கு தமிழ் நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற் கல்வி ஆசிரியர் இயக்கங்கள் கூட்டமைப்பின் மாநில அமைப் பாளர் செ.நா.ஜனார்த்தனன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


 Malaimurasu Today



Tamilnadu Hr.Sec.School Vocational Teachers Federation welcomes and congrats  by Janardhanan sn, M.Rajaram, D.Ramachandran, S.Renganathan, V.Krishnan, M.Iruthayaraj State Office Bearers TNHSS Vocational Teachers Federation 06-07-2016
we met our NEW director of Metric Schools MR.A.Karuppasamy today





we thanked the ADVOCATE MR.R.SASIDARAN TODAY


50% PENSION GO148 DATED 26-06-2016.  

THIS GOVERNMENT ORDER APPLY ONLY TO  MR.B.RAGAVENDRAN, ISLAMIYA HS SCHOOL, PERNAMBUT VELLORE DIST.
THIS ORDER ISSUED BY GOVT. IN THE COURT ON CONTEMPT PETITION FILED BY BR.  

WE THANKS TO OUR ADVOCATE MR.V.SASIDARAN HE GAVE THE INFORMATION TODAY
- BY JANARDHANAN SN GS TNHSSVTK 29-06-2016



» TODAY'S PAPER » TAMIL NADUCHENNAI, july 11,2016
G.O. extends pension benefit to part-time vocational teacher
·         SPECIAL CORRESPONDENT
In a huge sigh of relief to a retired vocational instructor of an aided school in Vellore district, the State government on the directions of the Madras High Court has issued a GO to make him eligible for pension even though he has worked only as a part-time instructor for about 11 years.
B. Raghavendran was initially appointed as a single part-time vocational instructor in Auditing and Accountancy at Islamia Higher Secondary School at Pernambut in 1978.
He was appointed as double part-time vocational instructor in 1979. In 1990, Mr. Raghavendran was appointed as full-time instructor.
On his superannuation in June 2010, he was allowed pensionary benefits only for the period when he was a full-time employee (between 1990 and 2010).
When he moved the High Court citing various GOs of the State government, the court in 2014 said 50 per cent of his part-time service period be calculated for pensionary benefits.
The appeal preferred by the State government too was dismissed in March this year.
Pursuant to the directions of the High Court, the School Education Department issued a GO to the effect that 50 per cent of his service as part-time vocational instructor i.e., five years and eight months and 27 days would be considered for pensionary benefits.
A welcome move
Welcoming the GO, the Tamil Nadu Higher Secondary School Vocational Teachers Federation has thanked the School Education Department.
In a statement, the federation’s State general secretary S.N. Janardhanan urged the authorities to issue GO as he claimed several other vocational instructors had obtained various orders in the Madras High Court and in its Madurai Bench.













OUR BELOVED LEADER MR.J.BALACHANDAR RETIREMENT AND MR.D.BALU PROMOTED AS HM MR.S.RADHAKRISHNAN AS PG AND OUR CO-STAFF, OFFICE BEARERS, MEMBERS FELICITATION FUNCTION

INVITATION ALL ARE INVITED PLEASE ATTEND YOURS sn Jana 29-06-2016

DATE  : 03-07-2016    TIME : 10.00 AM
PLACE : GOVT. HR.SEC. SCHOOL, GANDIROAD, PANRUTTI.




Today 26-06-2016 Dinmalar News in second page 



thanks Dinamalar 26-06-2016
பொறியியல் படிப்புக்கான தர வரிசைப் பட்டியல் நேற்று வெளி யிடப்பட்டது. இதில், 9 மாணவ, மாணவிகள் 200-க்கு 200 கட் ஆப் மதிப்பெண் எடுத்துள்ளனர்.

தமிழகத்தில் பொறியியல் படிப் புக்கு சுமார் 1.35 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ரேண்டம் எண் கடந்த 20-ம் தேதி கணினி மூலம் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப் பட்டது. இதைத் தொடர்ந்து, தர வரிசைப் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழ கத்தில் நேற்று நடந்தது.

இதில், தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கலந்துகொண்டு தரவரிசை பட்டியலையும், 200-க்கு 200 கட் ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் பட்டியலையும் வெளியிட்டார். பொதுப் பிரிவில் ஏ.அபூர்வா தர்ஷினி (கேரளா), வி.விக்னேஷ், (தஞ்சாவூர்), என். பரதன் (நெய்வேலி), ஆர்.ரக் ஷனா (விசாகப்பட்டினம்), எஸ். சிவராம் ருத்விக் (தாராபுரம்), கே.எம்.ஹர்ஷிதா (வேலூர்), ஷேக் அப்துல் சமீர் (நெல்லூர்) ஆகிய 7 பேரும், தொழிற்கல்வி பிரிவில் எஸ்.ரோஹிந்த் போஸ் (திண்டுக்கல்), எம்.டி.நிவேதா (ஆரணி) ஆகிய 2 பேரும் 200-க்கு 200 கட் ஆப் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

Seven students in the academic stream and two students from vocational stream have a cut-off of 200 according to the merit list released by the Tamil Nadu Engineering Admissions 2016 (TNEA) for Anna University’s single window counselling.

dear office berers we made rep.  through TACTO




 

yours S.N.JANARDHANAN   Email ID is - janardhanansn@gmail.com




TheNewIndianExpress 01-06-2016





BEST WISHES TO AIADMK NEW GOVERNEMNT by Tamilnadu Higehr Secondary School Vocational Teachers Kazhagam Reg.240/05


Honorable முதலமைச்சர் - Dr.J.ஜெயலலிதா



புதிய
அமைச்சர்கள் வாழ்க்கை குறிப்பு

அமைச்சர்களின் வாழ்க்கை குறிப்பு வருமாறு:-

 

பி.பெஞ்சமின்

பள்ளி கல்வித்துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள பெஞ்சமின்(வயது46) சென்னை அருகே உள்ள அயனம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர். இவரதுதந்தை பெயர் பாண்டியன். தாயார் பெயர் சுந்தரியம்மாள். இவர் ஆரம்ப கல்வியை அயனம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் பயின்று, தபால் மூலம் பி.. பட்டம் பெற்றுள்ளார்.கடந்த 1988-ல் .தி.மு.. வில் சேர்ந்து தீவிரமாக கட்சி பணியாற்றினார். 15 ஆண்டுகள் வில்லிவாக்கம் ஒன்றிய .தி.மு.. செயலாளராக தொடர்ந்து பணியாற்றி உள்ளார். 145-வது வார்டு மாமன்ற உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டு, முதல்- அமைச்சர் ஜெயலலிதாவால் மாநகராட்சி துணை மேயராக பதவியேற்றார். இவருக்கு ஷீலா என்ற மனைவியும், விஜய் பெர்லின், சாம்சங் பால் என்ற 2 மகன்களும் உள்ளனர். இவர் 2 முறை கட்சிக்காக போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Performance  in Vocational Subjects - 2016

 
S.No SUBJECT APPEARD     % PASSED FAILED Average Centums
1 ACCOUNTANCY & AUDITING THEORY 24500 81.3 19919 4582 109 58
2 AGRICULTURAL PRACTICES THEORY 12841 84.1 10799 2042 115 4
3 AUTO MECHANIC THEORY 482 79.1 381 101 135 0
4 DRAUGHTSMAN CIVIL THEORY 326 86.4 282 44 126 2
5 ELECTRICAL MACHINES AND APPLIANCES THEORY 7482 72.3 5409 2073 122 31
6 ELECTRONIC EQUIPMENTS THEORY 1497 58.9 882 615 118 4
7 FOOD MANAGEMENT AND CHILD CARE THEORY 458 91.5 419 39 106 0
8 GENERAL MACHINIST THEORY 5206 73.8 3842 1364 118 29
9 NURSING THEORY 1039 94.7 984 55 110 0
10 OFFICE SECRETARYSHIP THEORY 7927 77.3 6128 1799 106 0
11 TEXTILE TECHNOLOGY THEORY 162 83.3 135 27 161 0
12 TEXTILES AND DRESS DESIGNING THEORY 2160 96.2 2078 82 108 0
13 COMPUTER SCIENCE 298689 90.5 270314 28375 129 303
  TOTAL 362769 1091 321571 41198   431
680 post of vocational Teachers Pay Order for One Year from 01.10.15 to 30.09.2016 today THE DSE RELESED THE PAY ORDER 
           

GO(1D)No.169 Dated.04.05.2016 
BY D.Ramachandran, S.N.Janardhanan S.Renganathan, M.Rajaram, V.Krishnan, Irudayaraj TNHSSVTF 9
.05.2016

PLEASE DOWNLOAD FROM THE LINE

https://sites.google.com/site/vocationalteacherkazhagam/680-post-pay-order-upto-30-09-2016

THE DSE RELESED THE PAY ORDER FOR ONE YEAR 6156post con. order received till 31-12-16
GO(1D)No.139 Dated.06.04.2016
BY D.Ramachandran, S.N.Janardhanan S.Renganathan, M.Rajaram, V.Krishnan, Irudayaraj TNHSSVTF 
27.04.2016

PLEASE DOWNLOAD FROM THE LINE

https://sites.google.com/site/vocationalteacherkazhagam/6156postsPAYORDERGo139dt06042016-upto-31122016 

 

 

 

 

Vocational teachers promote voter awareness

STAFF REPORTER VELLORE, March 31, 2016 Updated: March 31, 2016 05:45 IST

 

Inspired by the Election Commission’s target of achieving 100 per cent polling in the May 16 Assembly elections, an association of vocational teachers in the State has vouched to get its members and their families cast their vote without fail.

The Tamil Nadu Higher Secondary School Vocational Teachers Kazhagam, during its executive committee meeting held recently, passed a resolution to ensure that vocational teachers across the State and their family members cast their votes in the elections.

But this is not the first time that the association is promoting voting among its members. “We campaigned for the same during the Lok Sabha polls in 2014 and Assembly elections in 2011. We have been continuously motivating our teachers to exercise their voting rights during elections. About 70 to 80 per cent of our teachers voted in these elections,” S.N. Janarthanan, State general secretary of the association said.

 

There are 5,000 vocational teachers in the State. The association will send circulars to its office-bearers in all the districts. They will meet vocational teachers in their respective districts and encourage them to vote without fail, he added. “Earlier, we sent SMSes to teachers saying cast your vote without fail. This time, we will see if Whatsapp can be used for the purpose,” he said. The teachers would be explained that voting was their right and duty.


THE JOINT DIRECTOR VOCATIONAL ASKED THE DETAILS THROUGH CEO BEFORE 31-03-2016 TO ALL CEOs
அரசு/ நகராட்சி/ மாநகராட்சி/நிதிஉதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும்/ ஓய்வுபெற்ற தொழிற்கல்வி ஆசிரியர்கள் சார்பான விவரம் கோருதல்

Please download the procedings of the Joint Director Vocational  https://sites.google.com/site/vocationalteacherkazhagam/particulars-called-by-jdv-23-03-2016

COMMERCE QUESTION PAPER GOOD

THANKS DINAMALAR
OLD PENSION SCHEME GO      by jana-16/03/2016

https://app.box.com/s/sj6ht3sche3fajwioizheabg9ubacuwa 

we met our Chief Election Commissnor 








THANKS TO OUR HON'BLE CM

THANKS TO DINAETHAL

thanks to malaimursu

EXP. PAY ORDER FOR 680 POSTS  AND PLEASE DOWNLOAD 

https://sites.google.com/site/vocationalteacherkazhagam/jan-feb-exp-pay-order-2016

TALKS WITH FINANCE MINISTER, AND MINISTERS

THANKS TO MalaiMalar






TACTO OB MEET OUR EDUCATION MINISTER Honb'ble.K.C.VEERAMANI AND EDN PRINCIPAL SEC.DR.D.SABITHA, DSE DR.S.KANNAPAN, SPD DR.POOJA KULKARNI, AND SUBMITTED OUR MEMORENDAM






BEST TEACHER AWARD BY LIONS CLUB TO JANARDHANAN SN




6156 POSTS CONUTINATION ORDER FOR THREE MONTHS FROM 1-1-2016TO 31-03-2016
as per the procedings of the Director of school Education RC No.001231/L/E3/2013 Dated 13/01/2016.  


to download please clieck the line

https://sites.google.com/site/vocationalteacherkazhagam/pay-for-3-months-for-6156postsbydse13012016

PAY ORDER FOR 3 MONTHS from Janauary 2016 to March 2016
117 Post of computer Teachers
92 Post of Gr.I Vocational Teachres
50+50 Post of vocational teachers
1880 Post of Computer Instructors

https://sites.google.com/site/vocationalteacherkazhagam/6156postextentionorder


WE MET THE JOINT DIRECTOR VOCATIONAL AND SUBMITTED MEMORENDAM TO STREESS OUR DEMANDS OUR JDV ASSURED TO TAKE ACTION ON THE DEMANDS 30.12.2015

ADVANCE HAPPY PONGAL - 2016


G.O Ms:117 | முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அரசு ஊழியர்களின் ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
  
முதலமைச்சர் நிவாரண நிதி -அரசு ஊழியர்கள் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் -அரசாணை  http://cms.tn.gov.in/sites/default/files/gos/par_e_117_2015.pdf

 

news today




DINAKARAN PAGE 17


வெள்ள நிவாரணம்: ஒருநாள் ஊதியம் வழங்கும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் 

 

திருச்சிராப்பள்ளி,டிச.13-

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பின் மாநில பொதுக் குழு கூட்டம் ஞாயிறன்று திருச்சியில் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாநில அமைப்பாளர்கள் ஜனார்த்தனன், ராஜாராம் ஆகி யோர் தலைமை வகித்தனர். இக்கூட்டத்தில் , மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தின ருக்கு நலத்திட்ட உதவி கள் செய்திட தமிழக முதல் வரின் பொது மற்றும் வெள்ள நிவாரண நிதிக்கு ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்து கொள்ள தமிழக அரசிற்கு கடிதம்கொடுப்பது, தொகுப் பூதிய காலத்தினை கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்கவேண்டும்.

பதவி உயர் வில்லா பணியிடங்களுக்கு தேர்வுநிலை தரஊதியம் நிர்ணயித்து நிதித்துறை பிறப்பித்துள்ள ஆணையின்படி தொழிற் கல்வி ஆசிரியர்களுக்கு நடைமுறைப்படுத்திட வேண்டும். பிற ஆசிரியர் களைப் போல் வெவ்வேறு பாடங்களில் உயர்கல்வி பெற்றவர்களுக்கு ஊக்கஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.  THEEKATHIR 14.12.2015

 

STATE GB MEETING OF Tamilnadu Vocational Teachers Federation AT TRICHY ALL ARE WELCOME  
DATE : 13.12.2015
TIME:10 AM
PLACE: BHISHEP HEBER HS SCHOOL, PUTHUR, TRICHY

ALL THE OFFICE BERERS ARE INVITED 
1.Tamilnadu Higher Secondary school Vocational Teachers Kazhagam
2.Tamilnadu Higher Secondary school Post Graduate Commerce Vocational Teachers Association
3. Tamilnadu Higher schondary school vocational Teachers Association Head by J.Renganathan Trichy 

Thanks to the dist office berarers & teachers who took part in the One Day Token Fast at chennai 
  



thanks to daily thanthi chennai 02/11/2015 
தொழிற்கல்வி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் உண்ணாவிரத போராட்டம்
சென்னை, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் சென்னை அரசு விருந்தினர் மாளிகை அருகில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாநில அமைப்பாளர்கள் செ.நா.ஜனார்த்தனன், ம.ராஜாராம் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில இணை அமைப்பாளர்கள் த.ராமச்சந்திரன், வி.கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிதிக் காப்பாளர் எஸ்.ரெங்கநாதன் வரவேற்று பேசினார். முடிவில் கே.இளங்கோவன் நன்றியுரை வழங்கினார்.
முன்னதாக போராட்டத்தின் போது, மாநில அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் பேசியதாவது:-
தொழிற்கல்வி ஆசிரியர்களின் கோரிக்கைகள் கடந்த 30 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. எனவே அரசு தொழிற்கல்வி ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளான தொகுப்பூதிய காலத்தினை கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்குதல், பதவி உயர்வில்லா பணியிடங்களுக்கு தேர்வு நிலை தர ஊதியம் நிர்ணயித்து நிதித்துறை பிறப்பித்துள்ள ஆணையின்படி தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு நடைமுறைப்படுத்திட கோருதல், பிற ஆசிரியர்களை போல வெவ்வேறு பாடங்களில் உயர்கல்வி பெற்றவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கிட கோருதல், உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.  





thanks to ThamizhMurasu

thanks to KalaiKathir

Thanks to Dailythanthi
Thanks to Dinakaran


 

Vocational teachers to go on fast in Chennai
   It will be observed on October 31

 
 

The Tamil Nadu Higher Secondary School Vocational Teachers Federation will observe a token fast in Chennai on October 31 to urge the government to look into their 15-point charter of demands.

The association, in a press release, said the government should take into account the work period during which the vocational teachers were on consolidated pay for computing their pension.

The association urged the government to grant incentive pay to vocational teachers who have acquired higher qualifications in other subjects as provided to other teachers. Among other demands, the association sought general transfer counselling for vocational teachers and wanted vocational curriculum to be made compulsory in all higher secondary schools.

To highlight their demands, the State general committee of the association decided to observe a fast in Chennai. A resolution to this effect was also passed at a meeting.

 

 





15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்கல்வி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

 

வேலூர், அக்.19–-

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 31–ந் தேதி சென்னையில் மாநில அளவில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடந்த மண்டல பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் நேற்று வேலூர் மண்டல பொதுக்குழு கூட்டம் வேலூர் அண்ணாசாலையில் உள்ள முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். மாநில இணைச் செயலாளர் கிருஷ்ணன், பொதுச்செயலாளர் தாகப்பிள்ளை, வேலூர் மாவட்டத் தலைவர் சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் சம்பத் வரவேற்றார்.கூட்டத்தில் தொகுப்பூதியம் காலத்தினை கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். பதவி உயர்வில்லா பணியிடங்களுக்கு தேர்வுநிலை தர ஊதியம் நிர்ணயித்து நிதித்துறை பிறப்பித்துள்ள ஆணையின்படி தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு நடைமுறைப்படுத்த வேண்டும். பிற ஆசிரியர்களைப் போன்று வெவ்வேறு பாடங்களில் உயர்கல்வி பெற்றவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 15 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 31–ந் தேதி சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகைஎதிரில் ஒரு நாள் மாநிலஅளவிலான அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்துவது எனதீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் சந்தானகிருஷ்ணன், செயலாளர் ஞானசம்பந்தன், கடலூர் மாவட்டத் தலைவர் பாண்டியன், விழுப்புரம் மாவட்ட தலைவர் மோகன்குமார் உள்படவேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.  THEKKATHIR 20.10.15


THANKS TO THAMIZH MURASU VELLORE

தொழிற்கல்வி ஆசிரியர்கள் போராட்ட ஆயத்தக் கூட்டம்

 

First Published : 19 October 2015 05:11 AM IST

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழில் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் போராட்ட ஆயத்தக் கூட்டம் தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், மேல்நிலை தொழில் கல்வி ஆசிரியர்களின் தொகுப்பூதியப் பணிக் காலத்தில் 50% ஓய்வூதியத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் அக். 31-ம் தேதி நடைபெறவுள்ள அடையாள உண்ணாவிரதப் போராட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இணை அமைப்பாளர் த. ராமச்சந்திரன் தலைமை வகித்தார். அமைப்பாளர் எம். ராஜாராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 














PAY ORDER FOR 680 TEACHERS FROM 01.10.2015 TO 31.12.2015 BY DSE to download the order please clike the line below

https://sites.google.com/site/vocationalteacherkazhagam/680-post-pay-order-upto-30-09-2014  

thanks MalaiMurasu

"தொழில்கல்வி ஆசிரியர்களுக்கு தேர்வுநிலைத் தரஊதியம் வழங்க வேண்டும்'         thanks to Dinamani

First Published : 12 October 2015 04:58 AM IST

தொழில்கல்வி ஆசிரியர்களுக்கு தேர்வுநிலைத் தரஊதியம் வழங்க வேண்டும் என்று, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழில்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

சேலத்தில் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளித் தொழில்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பின் சேலம் மண்டல பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு அந்த அமைப்பின் மாநில அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை வகித்தார். இணை அமைப்பாளர் வி.கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானங்கள் குறித்து மாநில அமைப்பாளர் ஜனார்த்தனன்

கூறியது:

தொழில் கல்வி ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தைக் கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்கிட திருத்திய ஆணையை வெளியிட வேண்டும்.

கடந்த 30 ஆண்டுகளாகப் பதவி உயர்வு ஏதுமில்லாமல் பணியாற்றி வரும் தொழில்கல்வி ஆசிரியர்களுக்கு, நிதித் துறை பிறப்பித்துள்ள அரசாணையின்படி தேர்வுநிலைத் தரஊதியம் நிர்ணயித்து வழங்க வேண்டும்.

பிற ஆசிரியர்கள் போல, வெவ்வேறு பாடங்களில் உயர்கல்வி பெற்றுள்ள தொழில்கல்வி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் அக்டோபர் 31-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை எதிரில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.


thanks to Dinakaran

THANKS TO THAMIZH MURASU




Vocational teachers want High Court orders on pension to be implemented

·         P.V.V. MURTHI  25-04-2015   TODAY'S PAPER » TAMIL NADUVELLORE, August 25, 2015

The Tamil Nadu Higher Secondary School Vocational Teachers’ Kazhagam has appealed to the state government to take into consideration the period during which the vocational teachers were on consolidated pay for computing their pension as per the judgments issued by the Madras High Court and the Madurai Bench of the High Court in related cases.   A resolution to this effect was passed at the state general body meeting of the association held at Thanjavur recently, according to a release issued here by S.N. Janardhanan, state general secretary.

Other resolutions

The other resolutions included requests for immediate filling up of all the 300 vocational teachers’ posts remaining vacant since 2007, incentive pay for teachers who had obtained higher qualifications in subjects other than the subjects of their basic degree, grant of pay on par with the postgraduate teachers as per the recommendations of the H.S.S. Lawrence Committee and the orders of the Madras High Court, making the vocational stream compulsory in all the higher secondary schools.

Scheme

It also included making vocational subjects compulsory both in the high school and higher secondary course under the central government’s vocational education scheme and the Rashtriya Madhyamik Siksha Abhiyan. D. Ramachandran, state president presided.






தொழிற்கல்வி ஆசிரியர்கள் 3ஆம் கட்ட கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த முடிவு

Posted: 25 Aug 2015 09:08 PM PDT

தொழிற்கல்வி ஆசிரியர்கள் கோரிக்கையை வலியுறுத்தி, 3-ஆம் கட்ட கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் மாநில பொதுச் செயலர் செ.நா.ஜனார்த்தனன் தெரிவித்தார்.

இதுகுறித்த அவரது அறிக்கை:
சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில் தொகுப்பூதிய காலத்தை கணக்கிட்டு ஓய்வூதியம், பதவி உயர்வில்லா பணியிடங்களுக்குத் தேர்வுநிலை தர ஊதியம் 5,400-க்கான தெளிவுரை, வெவ்வேறு பாடங்களில் உயர்கல்வி பெற்றவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 3ஆவது கட்ட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
முதல் கட்டமாக 31 வரை மாவட்ட நிர்வாகிகள்
கோரிக்கை மனுக்களை அஞ்சலில் அனுப்புவது, 2-ஆவது கட்டமாக செப்டம்பர் 1 முதல் 5 வரை அஞ்சல் அட்டை இயக்கம் நடத்துவது, 3-ஆவது கட்டமாக செப்டம்பர் 15-இல் மாநில அளவில் சென்னை பள்ளிக் கல்வி இயக்குநரிடம் பெருந்திரள் முறையீடு செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் தொழிற்கல்விப் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும்.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம், மத்திய அரசின் தொழிற்கல்வி திட்டத்தின் கீழ் தொழிற்கல்விப் பாடத்தை உயர்நிலைப் பிரிவிலும், மேல்நிலைப் பிரிவிலும் கட்டாய பாடமாக்க வேண்டும் என்பன உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
டில்லி: 7-வது சம்பள கமிஷனை பரிந்துரை செய்தால் அடுத்த நிதியாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக ரூ . 1லட்சம் கோடிக்கும் அதிகமாக செலவு பிடிக்கும் என மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


கடந்த 2014-ம் ஆண்டு 7-வது சம்பள கமிஷன் பரிந்துரைக்கப்பட்டு 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல் அமல்படுத்துவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்படி 2016-2017-ம் நிதியாண்டில் இது நடைமுறைப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக இன்று நடந்த பார்லி. மழைக்கால கூட்டத்தொடரில் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறியதாவது, மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள விகிதம், நடப்பு நிதியாண்டில் ரூ. 1 லட்சத்து 619 கோடி செலவாகிறது. 7-வது சம்பள கமிஷன் பரிந்துரையின் , 2016-17-ம் நிதியாண்டில் 16.79 சதவீதம் அதிகரித்து ரூ. 1.16 லட்சம் கோடியாகவும், 2017-18 ம் நிதியாண்டில் ரூ. 1.28 லட்சம் கோடியாகவும் அதிகரிக்கும்.
அதே போன்று நடப்பாண்டில் மத்திய அரசு ஊழியர்களின் ஒய்வூதியதாரர்களுக்கான செலவு ரூ. 88,521 கோடியாகும், 7-வது சம்பள கமிஷன் பரிந்துரையின்படி 2016-17-ம் நிதியாண்டில் ரூ.1.02 லட்சம் கோடியாகவும், 2017-18-ம் நிதியாண்டில் ரூ. 1.12 லட்சம் கோடியாகவும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார். thanks to DINAMALAR 14.08.2016

Heary welcome to our Dist Chief Educational Officer Mr.M.Boopathi


MALAIMURASU



our deepest condolence to departed Leder
DR.APJ Abdul Kalam










wish you all happy educational new year 2015-16
 
 

 

DSE - BT TO PG ASST PANEL (COMMERCE CM) AS ON 01.01.2015 CLICK HERE...

DSE - BT TO PG ASST PANEL (COMMERCE SM) AS ON 01.01.2015 CLICK HERE...

 
   

 
இணை. இயக்குனர்கள் பதவி உயர்வு மற்றும் இடமாறுதல்

 

Vocational teachers to take out rally to Secretariat



 Thiruvarur Dist.GB meeting on 01.03.15

 Mr.A.B.KUMANAN HONONERD

 AT THIRUVARUR GS SPOKE

Teachers’ plea for pension, promotione

 The Tamil Nadu Higher Secondary School Vocational Teachers’ Kazhagam, , Tirupattur Education District (TED) has urged the government to issue an order for taking into account the period during which the vocational teachers were getting consolidated pay for the purpose of computing their pension.

A resolution to this effect was passed at the administrative committee meeting of the TED unit of the association held at Gudiyatham on Thursday. The resolution demanded that the government should issue the G.O. on the basis of the orders issued by the Madras High Court and the Madurai Bench of the High Court in various cases

Other resolutions passed at the meeting included paving the way for the promotion of vocational teachers as headmasters of schools on par with the graduate teachers. The relevant resolution stated that while graduate teachers with a minimum of 10 years of experience are promoted as headmasters, it was regrettable that vocational teachers who are serving for 30 years are still stagnating in the same posts. By another resolution, the association wanted the government to grant pay to the vocational teachers on par with postgraduate teachers as per the recommendations of the Dr. H.S.S. Lawrence Committee and in deference to the order of the Madras High Court.

S. Sivaraj, Vellore district president of the association presided. S.N. Janardhanan state general secretary explained the activities of the state body.                      thanks The Hindu 14.02.2015
Thanks The New Indian Express 15.2.15


thanks Dinamani 15.2.2015
09-02-2015
TO DAY THE GRADE PAY CASE NOT LISTED IN THE LIST OF MADRAS HIGH COURT AND NOT HERED. THIS  MAY COME IN THE NEXT TWO or three  WEEKS BY OUR ADVOCATE MR.R.SASIDARAN  this is for information

- yours Janardhanan sn General Secretray 9443345667

13.01.2015     1. Vocational Students stregth     1(a) Formats (2)

https://app.box.com/s/qt9cf07g52b2b9w0koom

 

PAY AUTHORISATION LETTER FROM DSE FOR JAN TO MAR - 2015
https://sites.google.com/site/vocationalteacherkazhagam/pay-authorization-orders-jan-mar-2015



THANKS TO DECCAN CHRONICLE 15.01.2015

THANKS TO DECCAN CHRONICLE 15.01.2015
THANKS TO DINAMANI 06.01.2015
PG PANNEL FOR 01.01.2015

https://sites.google.com/site/vocationalteacherkazhagam/pg-pannel-1-1-2014-dse-letter


TYPEWRITING EXAM WILL BE PRACTICAL EXAM FROM MARCH - 2015 ONWARDS GO AS FOLLOWS 

https://sites.google.com/site/vocationalteacherkazhagam/typewriting-as-practical-exam-from-march-2015-go

W
E MET OUR JD(VOCATIONAL) TODAY AT OFFICE

https://sites.google.com/site/vocationalteacherkazhagam/meet-jd-v-17-12-2014

COURT ORDER AND REPLY BY DSE PROCEEDINGS

 https://sites.google.com/site/vocationalteacherkazhagam/grade-pay-court-order-dse-letter

 


 


தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களைப் பாதுகாக்க, பாதுகாப்பு சட்டம் கொண்டு வரவேண்டும், அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் செவ்வாயன்று ( டிச.9) வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  


THANKS TO THEEKKATHIR FOR PHOTO & DINAMANI FOR NEWS 10.12.2014

Judgement of GRADE PAY  
https://sites.google.com/site/vocationalteacherkazhagam/judgement-of-sampath-nagarajan-and-j-prabu








03.11.2014 CEO VELLORE LETTER ON REVISED Sel.G AND SPL G

https://sites.google.com/site/vocationalteacherkazhagam/ceo-vellore-letter-forwareded-to-all-hm

DO LETTER FROM SCHOOL EDUCATION SECRETARY TO DSE 

https://sites.google.com/site/vocationalteacherkazhagam/do-letter-from-se-secretary-to-dse-290914

Congrats to Mr.M.Rajaram He and Others got Stay on the FINANCE (CMPC) DEPARTMENT PRINCIPAL SECRETARY LETTER TO DSE No.66858/CMPC/2013-2, DATED 22-08-2014 


Page-2


KINDLY DOWNLOAD THE ABOVE DOCUMENT TO CLICK THE FOLLOWING LINE

https://sites.google.com/site/vocationalteacherkazhagam/mr-m-rajaram-and-others-madurai-high-court-stay-order

KINDLY DOWNLOAD THE NO PROMOTION LETTER FROM GOVERNMENT AND DSE THE  DOCUMENT TO CLICK THE FOLLOWING LINE

https://sites.google.com/site/vocationalteacherkazhagam/no-promotion-letter-from-dse-ses

ABOLITION OF ATTESTATION | சான்றிதழ் நகல்களில் அரசு அதிகாரிகளின் சான்றொப்பம் பெறும் நடைமுறையை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

https://sites.google.com/site/vocationalteacherkazhagam/abolition-of-attestation

DR.RADHAKRISHNAN (BEST TEACHER) AWARD TO OUR ONE AMONG THE FOUNDER MR.J.BALACHANDAR, Vocational Teacher and NCC OFFICER, GBHSS, PANRUTTI. 05.09.2014 Best wishs to the awardee and thanks to Hon'ble CM and Govt of Tamilnadu by TNHSS Vocational Teachers Kazhagam.

     
Mr.J.Balachndar Receiving the Award From the Hon'ble School Education Minister K.C.Veeramani, our DSE Dr.V.C.Rameshwaramurugan and School Education Department Principal Serectary Dr.D.Sabitha

 

FINANCE (CMPC) DEPARTMENT PRINCIPAL SECRETARY LETTER TO DSE No.66858/CMPC/2013-2, DATED 22-08-2014 Directorate of School Education, Chennai-600006 Rc.No.67743/v1/S1/ 2014 Dated 8.9.2014 to download please clik the next line  https://sites.google.com/site/vocationalteacherkazhagam/finance-sec-letter-to-dse-grade-pay-4800-1

 

GRADE PAY Accountant General Madurai letter
 

 

BY Janardhanan sn GS  01.09.2014  Please download the copy of letter to the following line

https://sites.google.com/site/vocationalteacherkazhagam/grade-pay-madurai-ag-letter

உபரி பணியிடத்தில் பணிபுரியும் (Deployment) தொழிற்கல்வி ஆசிரியர்களின் விவரங்கள் கோருதல்

Please download the follwing web address

 by D.Ramachndran. sn.janardhanan, s.renganathaN 12/08/2014

GRADE PAY CLARIFICATION BY OFFICE OF THE PRINCIPAL ACCOUNTANT GENERAL (A&e) TAMILNADU CHENNAI DATED:02.12.2013

Please download the copy

https://sites.google.com/site/vocationalteacherkazhagam/grade-pay-ag-letter-copy

alternate web address: http://vocationaljanavellore.blogspot.in/

 









SAKSHI TELUGU NEWS PAPER 30.07.2014


26/07/2014

CEO Transfer Order Issued!

           பள்ளிக்கல்வி - 15 முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணி மாறுதல் மற்றும் 15 மாவட்டக் கல்வி அலுவலர்கள் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிபவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து அரசு உத்தரவு

GO.101 SCHOOL EDUCATION DEPARTMENT DATED.25.07.2014 - 15 CEO / ADDL.CEOs TRANSFERRED & 15 DEOs PROMOTED AS CEOs REG ORDER & LIST CLICK HERE...

THANKS TO PADASALAI








Vocational teachers ask for pay parity with PG teachers

 
 
The Tamil Nadu Higher Secondary School Vocational Teachers Kazhagam has demanded pay parity with postgraduate teachers.
A resolution to this effect was passed at the 27th annual general council meeting of the Vellore district unit of the association held under the presidentship of S. Sivaraj, district president here on Sunday.
The resolution pointed out that the government had already passed an order granting equal pay for equal work for the agricultural vocational teachers in deference to the order of the Madras High Court based on the ‘equal pay for equal work’ concept in the petition filed by an agricultural vocational teacher.
The association demanded the pay parity also on the basis of the recommendations of the Dr. H.S.S. Lawrence Committee constituted by the Jayalalithaa government in the early 1990s, and in pursuance to various High Court orders.
Other resolutions included requests for incentive pay for vocational teachers who acquired PG qualifications in subjects other than the subjects of the basic degree, promotion as headmasters, says a release from S.N. Janardhanan, State general secretary of the association.
 
Posted: 30 Jun 2014 04:52 AM PDT
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் பொதுக்குழு கூட்டம்தஞ்சை அரசர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் சிவாஜி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ரெங்கநாதன் வரவேற்றார். கூட்டத்தில் மாநில தலைவர் ராமச்சந்திரன் கலந்து கொண்டுபேசினார்.
கூட்டத்தில்,அரசு பள்ளிகளில் காலியாக உள்ள தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். பொதுமாறுதல் கலந்தாய்வு தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் நடத்த வேண்டும். தரம் உயர்த்தப்படும் மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்வி பிரிவுதொடங்கப்பட்டு தொழிற்கல்வி பணியிடம் உருவாக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை, சிறப்புநிலை மற்றும் இதரசலுகைகள் வழங்கப்படாமல் உள்ளது. இந்த சலுகைகளை உடனே வழங்க வேண்டும்.இந்த கோரிக்கைகள் தொடர்பாக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை வருகிற 7–ந்தேதி நேரில்சந்தித்து மனு கொடுக்க தஞ்சையில் இருந்து 2 வேன்களில் புறப்பட வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

 
Vocational teachers permitted to value commerce answer scripts
SHARE  ·   PRINT   ·   T+  
 
Fully qualified vocational commerce teachers who were handling the commerce subjects in the higher secondary course were allowed to value Plus Two commerce answer scripts at the district valuation centre in N. Krishnaswamy Mudaliar Higher Secondary School here from Tuesday following the orders of the Principal Secretary, School Education Department, Director of Government Examinations (DGE) and the Joint Director of Government Examinations (Higher Secondary).
According to a press release from S.N. Janardhanan, State general secretary of the Tamil Nadu Higher Secondary School Vocational Teachers Kazhagam, an amicable settlement was reached between the vocational commerce teachers and the postgraduate commerce teachers. This was done at the instance of V. Rajarajeswari, Joint Director of Government Examinations (HS) who visited the centre on Tuesday and held talks with both categories of teachers.
The PG commerce teachers staged a demo at the valuation centre on Saturday protesting against engaging vocational commerce teachers for valuation. Following this, the Vocational Teachers Kazhagam sent a petition to the DGE demanding that the fully qualified vocational commerce teachers be allowed to value commerce scripts.
 
Amicable settlement reached between vocational, postgraduate teachers
 
 

THE HINDU  
Today's Paper » NATIONAL » TAMIL NADU Published: March 31, 2014 00:00 IST | Updated: March 31, 2014 05:58 IST
Vocational commerce teachers submit petition to DGE  
Special Correspondent
The Tamil Nadu Higher Secondary School Vocational Teachers’ Kazhagam has appealed to Director of Government Examinations (DGE) Rajarajeswari to permit fully-qualified vocational commerce teachers to value commerce answer scripts at the district valuation centres in the light of the agitation resorted to by postgraduate commerce teachers protesting the valuation of commerce answer scripts by vocational commerce teachers on Saturday.
The PG teachers staged a demonstration at N. Krishnaswamy Mudaliar Higher Secondary School, Vellore, the district valuation centre for Plus-Two subjects on Saturday, demanding that vocational commerce teachers should not be allowed to value commerce answer scripts.
The Vocational Teachers’ Kazhagam said in its memorandum to the DGE that vocational commerce teachers had been permitted to value commerce answer scripts from 1978-79 when the vocational stream was introduced in the State. Both vocational commerce teachers and PG commerce teachers were handling commerce subjects for the same type of Plus-Two students.
In fact, fully-qualified vocational teachers were teaching commerce in many higher secondary schools where PG commerce teachers’ posts had not been sanctioned. S.N. Janardhanan, State general secretary of Vocational Teachers’ Kazhagam, said that the association requested the DGE to permit valuation of commerce scripts by vocational teachers who have been handling commerce and accountancy subjects in the academic stream and commerce subject in the vocational stream as per G.O. no.8 and G.O. no.9 dated January 1, 2009 and as per the proceedings of the Director of School Education and to issue an order permitting valuation of commerce answer scripts by vocational teachers who have been valuing the scripts from 1979.
The association condemned the attitude of PG teachers in opposing the valuation of commerce answer scripts by the fully-qualified vocational commerce teachers who have been handling Plus-Two commerce subjects for the last 35 years.

“Permit fully-qualified vocational commerce teachers to value Plus-Two commerce answer scripts”

Printable version | Mar 31, 2014 12:01:13 PM | http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/vocational-commerce-teachers-submit-petition-to-dge/article5853391.ece © The Hindu
 
WE HAD TAKLKS WITH DSE DR.RAMESWARAMURUGAN AND JD(VOCATIONAL)DR.D.RAJENDRAN IMMEDIATE ACTION WILL BE TAKEN ON OUR DEMAND AND ASSURENNCE BY DSE AND JD HENCE THE AARPATTAM IS WITHDRAWN BY D.RAMACHANDRAN, SN.JANARDHANAN, S.RENGANATHAN 

 7 ஆவது ஊதிய குழுவிற்காக மத்திய நிதி அமைச்சகம் புதிய இணையதளம் ஒன்றை தொடங்கி உள்ளது.
http://finmin.nic.in/7cpc/index.asp

Resolution on Terms of Reference of 7th CPC (2 MB)

http://finmin.nic.in/7cpc/7cpcGazetteNotification.pdf


 


 Vocational teachers drop agitation plan
The Tamil Nadu Higher Secondary School Vocational Teachers’ Kazhagam has decided to withdraw its proposed agitation in Chennai on Saturday to draw the attention of the State government to their long-pending demands following an assurance given by the Director of School Education and the Joint Director of Vocational Education in Chennai on Friday.
D. Ramachandran, State president, and S.N. Janardhanan, State general secretary of the association, said in a release that they, along with treasurer S. Ranganathan, met Director of School Education V.C. Rameswara Murugan and Joint Director D. Rajendran in Chennai on Friday and presented their demands.
The demands included issue of Government Order for calculating pension of vocational teachers taking into consideration also the period during which they were on consolidated pay as per the orders of the Madras High Court, grant of pay to vocational teachers on a par with postgraduate teachers as per orders of the Madras High Court and the recommendation of Dr. H.S.S. Lawrence Committee, grant of incentive pay to vocational teachers who obtained PG qualifications in subjects different from that of their basic degree, and representation in government examination duties.
Mr. Ramachandran and Mr. Janardhanan said that both the Director and Joint Director assured them of appropriate action.
THANKS TO      THE HINDU 01.03.2014 and the Hindu Tamil 28.02.2014
 
+2 Vocational accountancy and auditing Practical Question Bank Set-1 and Set-2 for download please click the line https://sites.google.com/site/vocationalteacherkazhagam/accountancy-and-auditing-practical-set-1-and-2


PLEASE CLICK TO DOWNLOAD PAY CONTINUANCE ORDER FOR FOR 680 POST FOR THE PERIOD FROM 1.10.2013 TO 30.09.2014     https://sites.google.com/site/vocationalteacherkazhagam/680-post-pay-order-upto-30-09-2014
THE DIRECTOR OF GOVERNMENT EXAMINATION DR.K.DEVARAJAN HAD DISCUSSTION WITH VARIOUS ASSOCIATION ON 04.01.2014 WE ALSO PARTICIPATED IN THAT MEETING 

Vocational teachers for implementing Lawrence panel recommendations
Office-bearers of Tamil Nadu Higher Secondary School Vocational Teachers’ Kazhagam met K.C. Veeramani, School Education Minister, recently and submitted a memorandum of demands.
The delegation assured the Minister of total cooperation to the government in implementing all schemes of the department. It requested him to take steps to implement the recommendations of Dr. H.S.S. Lawrence Committee constituted by the government in 1993 to revamp vocational education, and which were accepted by the government, as announced in the Assembly in 1994 . The delegation said the committee had also recommended that vocational teachers should be paid salary on a par with postgraduate teachers.
Other demands included making the introduction of vocational stream compulsory in all higher secondary schools, promotion of all vocational teachers of higher secondary schools as headmasters, payment of pension to retired teachers taking into consideration also the period during which they were on consolidated pay as per the judgments of the Madras High Court, and grant of two incentive increments to vocational teachers who have got their postgraduate degree in a subject different from that of their basic degree as given to other categories of teachers.
The delegation requested the Minister to ensure that vocational teachers’ category was also included in the list of teachers to be appointed as departmental officers/additional departmental officers in charge of invigilation during public exams.
The association requested the Minister to increase the number of valuation centres for Plus-Two vocational stream from two to five or have one valuation centre in each district.
The delegation comprising S.N. Janardhanan, State general secretary, S. Sampath, State organising secretary, and S. Sivaraj, district president, also met S.R.K. Appu, president of the district education committee.
 
 
JUDGEMENT COPY FOR PENTION TO VOCATIONAL TAEACHERS
https://sites.google.com/site/vocationalteacherkazhagam/home/50-consolidated-pay-period-for-pension-for-vocational-teacher

அரசாணை  இல்லாமலேயே தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு அரசாணைக்கு முரணான ஊதியவிகிததில் பணப்பயன் வழங்க ஆணையிட்ட தலைமை ஆசிரியர்களிடம்   பள்ளிகல்வித்துறை இயக்குனர் விளக்கம் கோரியுள்ளார்  .
https://sites.google.com/site/vocationalteacherkazhagam/home/dse-proceedings-to-call-explanation-to-hms
PLEASE CLICK THE LINE TO DOWNLOAD THE LETTER SENT BY HM TO CEO 
https://sites.google.com/site/vocationalteacherkazhagam/letter2ceobyhm 
 
Posted: 11 Dec 2013 06:12 AM PST
 


Thanks to dinamalar 25.10.2013



VELLORE DIST COLLECTOR Dr.P.SANKAR, GRETED THE JRC BEST COUNSELLOR AWARDEES MR.S.N.JANARDHANAN AND Mrs.A.TAMILARASI ALONG WITH FROM LEFT DEO VELLORE IC BABU  DEO TIRUPATTUR PRIYADARSHINI.  CEO VELLORE MR.T.V.SENGUTTUVAN,
 


ASSISTANT COMMISSIONOR of Police (Triplican Region, Chennai) MR.SENTHILKUMAR MADE ARRANGEMENT FOR TALKS
WE MADE REPRESENTAION TO THE GOVENMENT OF TAMILNADU AND MEET THE SCHOOL EDCUATION SECRETARY MRS.D.SABITHA AND WE GIVEN THE MEMORENDAM
INCLUDES 5 DEMANDS WITH STATE PRESIDENT D.RAMACHANDRAN, GEN.SEC.S.N.JANARDHANAN, TRSURER S.RENGANATHAN, VP-S.DURAIRAJ, S.SENTHILNATHAN, S.THIRUNAVUKKARASU, P.MATHIYALAGAN, J.RENGARANTHAN & J.CHANDRASEKARAN AND INSPECTOR VEERAMANI, C.RAMALINGAM .
1. HIGH SCHOOL HM PROMOTION AS PER COURT ORDERS
2. PENTION FOR CONSOLIDATED PAY PERIOD
3. GR
ADE PAY ON PAR WITH GRADUATE TEACHERS AS PER GO 23
4. CROSS MAGER INCENTIVE FOR VOCATIONAL TEACHERS
5. VOCATIONAL TEACHERS 2 POST FOR ALL SCHOOLS AND ISSUE TEXT BOOKS FOR VOCATIONAL STUDENTS IN TIME AND ADIQUATE.
 

we met the Secretary Text Book Corporation Mr.R.Pichai and expressed our greetings
 

26-08-2012 SUNDAY STATE GB MEETING
PLANCE       :  GOVT. RAJA'S HR.SEC. SCHOOL, THANJAVUR
DATE            :   26TH AUGUST SUNDAY


Here is another website: janavellore.simplesite.com
http://janavellore.blogspot.in/2012/06/janavellore.html


Today, there have been 13 visitors (28 hits) on this page!
S.RENGANATHAN, STATE PRESIDENT, S.N.JANARDHANAN, STATE GENERAL SECRETARY, A.B.KUMANAN, STATE TREASURER, NO.25, DR.RADHAKRISNAN NAGAR, VELLORE - 632006 PHONE:9443345667
THANKS FOR YOUR VISIT PL.VISIT AGAIN THANKS FOR YOUR VISIT PL.VISIT AGAIN THANKS FOR YOUR VISIT PL.VISIT AGAIN THANKS FOR YOUR VISIT PL.VISIT AGAIN This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free